Main Menu

தண்ணீர் தங்கத்தை விட உயர்வானது – எஸ்.பி.பாலசுப்ரமணியம்

தண்ணீரின் தேவையை அனைவரும் உணர்ந்து செயற்பட வேண்டும் என பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தண்ணீர் தங்கத்தை விட உயர்வானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சென்னையில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற கூர்கா திரைப்படவிழாவில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், தமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுதற்கு நாம் ஒவ்வொருவரும் தான் காரணம் என்பதை உணரவேண்டும் எனவும்  குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...