Main Menu

தலைமைத்துவப் போட்டியிலிருந்து சாஜித் ஜாவிட் வெளியேறினார்

இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற கொன்சர்வேற்றிவ் கட்சியின் தலைமைத்துவப் போட்டியின் நான்காவதுகட்ட வாக்கெடுப்பின் முடிவுகள் சற்றுமுன்னர் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த வாக்கெடுப்பில் மிகக்குறைந்த வாக்குகளை பெற்ற உள்துறை அமைச்சர் சாஜித் ஜாவிட் போட்டியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து இப்போது போட்டியில் மூன்று போட்டியாளர்கள் எஞ்சியுள்ளனர்.

மற்றைய மூன்று வாக்கெடுப்புகளைப் போலவே நான்காவதுகட்ட வாக்கெடுப்பிலும் அதிகமான வாக்குகளைப் பெற்று பொரிஸ் ஜோன்சன் முன்னிலை வகிக்கிறார்.

எஞ்சியுள்ள மூன்று போட்டியாளர்களுக்கான ஐந்தாவதுகட்ட வாக்கெடுப்பு 3.30 க்கும் 5.50 க்கும் இடையில் இடம்பெறவுள்ளது. இதன் முடிவுகள் மாலை 6.15 மணியளவில் வெளியிடப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

பகிரவும்...