Main Menu

தடுப்பூசி தயாரிப்பு இந்தியாவின் சுய பெருமையின் அடையாளம்- மோடி பெருமிதம்

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியானது, சுயசார்பு இந்தியாவின் சின்னம் மட்டுமல்லாது அதன் சுய பெருமையின் அடையாளம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி, மன் கி பாத் என்ற வானொலி நிகழ்ச்சியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் குறிப்பிடுகையில், “இந்தச் சங்கடம் நிறைந்த வேளையில், இந்தியாவால் எப்படி உலகிற்கு சேவையாற்ற முடிகிறது என்றால், நம் நாடு இன்று மருந்துகள் மற்றும் தடுப்பூசி தயாரிப்பில் வல்லமை பெற்றிருக்கிறது என்பதுடன் சுயசார்பு அடைந்திருக்கிறது என்பதால்தான்.

பல்வேறு நாடுகளின் குடியரசுத் தலைவர்களும் பிரதமர்களும் இந்தியா குறித்து வாழ்த்துச் செய்திகளை அனுப்பி வருகின்றனர்.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியானது, சுயசார்பு இந்தியாவின் சின்னம் மட்டுமல்லாது, அதன் சுய பெருமையின் அடையாளமாகும்.

நாம் உலகின் மிகப்பெரிய தடுப்பூசி இயக்கத்தை மேற்கொள்வது மட்டுமல்லாமல், நமது குடிமக்களுக்கு தடுப்பூசி போடுவதில் மிக வேகமாக இருக்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...