Main Menu

டெக்சாஸ் மாகாணத்தில் மீண்டும் துப்பாக்கிச்சூடு – 5 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் மிட்லண்ட், ஒடிசா பகுதியில் காரில் வந்த மர்ம நபர்கள் திடீரென அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டதில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 21 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

துப்பாக்கிதாரிகள் இருவரில், ஒருவர் சுடப்பட்டதாகவும், மற்றொருவர் தேடப்பட்டு வருவதாகவும், அம்மாநில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர், 30 வயது நிரம்பிய வெள்ளையினத்தவர் என பொலிஸார் அடையாளப்படுத்தியுள்ளனர்.

ஏற்கனவே, கடந்த ஓகஸ்ட் மாதம் நான்காம் திகதி டெக்சாஸ் மாகாணத்தில் வோல்மார்ட் வணிக வளாகம் ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 20 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...