Main Menu

ஜனாதிபதி மக்ரோனுக்கு கொரோனா தொற்று

ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அண்மைய நாட்களில் மக்ரோனுக்கு கொரோனா தொற்றுக்குரிய அறிகுறிகள் தென்பட்டதால், அவருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவு இன்று வியாழக்கிழமை வெளியானது. அதிலேயே அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.  அதைத் தொடர்ந்து, ஜனாதிபதி மக்ரோன் அடுத்த 7 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட உள்ளார்.  ஜனாதிபதியின் எலிசே மாளிகை இத்தகவலை சற்று முன்னர் வெளியிட்டுள்ளது.


பகிரவும்...