Main Menu

ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 15 அல்லது 23 – மஹிந்த தேசப்பரிய

ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 15 ஆம் திகதி அல்லது 23 ஆம் திகதி இடம்பெறலாமென சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் பிரதிநிதிகளுடன் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் அவசர சந்திப்பொன்றை  இன்று செவ்வாய்க்கிழமை மேற்கொண்டிருந்தார்.

அதன்படி இன்று ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக கலந்துரையாடிய நிலையில், ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 15 ஆம் திகதி அல்லது 23 ஆம் திகதி இடம்பெறலாம் என அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...