Main Menu

சென்னையில் ட்ரோன்கள் மூலமாக கிருமிநாசினி தெளிக்க திட்டம்!

சென்னையில் முக்கிய இடங்களில் இன்று முதல் ட்ரோன்கள் மூலமாக கிருமிநாசினி தெளிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. தற்போது ஸ்பிரேயர்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கு அதிக ஆட்களும், அதிக நேரமும் தேவைப்படுவதால் ட்ரோன்கள் மூலம் மேலே இருந்து கிருமிநாசினி தெளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக அண்ணா பல்கலைக் கழக தொழில்நுட்ப வல்லுனர்கள் மூலம் ட்ரோன்களை தயாரித்து, விவசாய நிலங்களில் மேலிருந்து தெளித்து சோதனை நடத்தப்பட்டது.

இதற்காக 20 ட்ரோன்கள் பெறப்பட்டு இன்று முதல் சென்ட்ரல், கோயம்பேடு பேருந்து நிலையம், மெரினா உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடிய இடங்களில் மேலிருந்து கிருமிநாசினிகள் தெளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீவிரமாக பாதிக்கப்பட்ட சீனாவில் இதே பணிக்காக ஆயிரக்கணக்கான ட்ரோன்களை பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...