Day: October 17, 2021
ஜனாதிபதி மக்ரோனின் செல்வாக்கு அதிகரிப்பு
ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்களே உள்ள நிலையில், ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் செல்வாக்கு அதிகரித்துள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியான புதிய கருத்துக்கணிப்பு ஒன்றில் இந்த முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்த ஒக்டோபர் மாதத்தில் ஜனாதிபதி மக்ரோன் 40 புள்ளிகள் செல்வாக்குடன் உள்ளார்.மேலும் படிக்க...
மார்செயில் வாள் வெட்டு தாக்குதல்! – இருவர் படுகாயம்! – சந்தேக நபர்கள் கைது!
மார்செயில் இடம்பெற்ற வாள் வெட்டு தாக்குதலில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். சந்தேக நபர்கள் இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நேற்று சனிக்கிழமை இரவு, மார்செயின் 15 ஆம் வட்டாரத்தில் உள்ள Saint-Louis பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஆயுததாரிகள் இருவர், இரவு 10.30 மணிமேலும் படிக்க...
சூடான்: நெருக்கடி தீவிரம் அடைவதால் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பை கோரும் போராட்டக் காரர்கள்
சூடான் நாட்டு ஆட்சி அதிகாரத்தை இராணுவத்தினர் ஆட்சிக் கவிழ்ப்பு மூலம் கைப்பற்ற வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர். சூடான் தலைநகரான கார்டோமில் இருக்கும் ஜனாதிபதி மாளிகைக்கு வெளியே, நேற்று (சனிக்கிழமை) இந்த போராட்டம் இடம்பெற்றுள்ளது. அந்நாட்டின் அரசியல் சூழல் மோசமடைந்து வருவதால்மேலும் படிக்க...
தமிழ்நாடு ஆளுநர் மாளிகை பெயரில் போலி மின்னஞ்சல் முகவரி -மக்கள் நம்பி ஏமாற வேண்டாம்
தமிழ்நாடு ஆளுநர் மாளிகை பெயரில் போலி மின்னஞ்சல் முகவரியில் பரப்பப்படும் செய்திகளை நம்ப வேண்டாம் என ஆளுநர் மாளிகை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-சில விஷமிகள், ஆளுநரின் பெயரில் போலியாக சில மின்னஞ்சல் கணக்குகளை உருவாக்கி,மேலும் படிக்க...
பிராந்திய தலைவர்களின் வருடாந்த உச்சி மாநாட்டிலிருந்து மியன்மார் இராணுவ தளபதி நீக்கம்
இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள பிராந்திய தலைவர்களின் வருடாந்த உச்சிமாநாட்டிலிருந்து மியன்மாரின் இராணுவ தளபதி நீக்கப்பட்டுள்ளார். தென்கிழக்காசிய நாடுகளின் சங்கம் அவருக்கு பதிலாக மியன்மாரில் அரசியல் சார்பற்ற பிரநிநிதி ஒருவரை உச்சிமாநாட்டில் இணைத்துக்கொள்ள இணங்கியுள்ளது. மியன்மாரின் அதிகாரத்தை இராணுவத்தினர் கைப்பற்றியுள்ள நிலையில் இந்தமேலும் படிக்க...
முல்லைத்தீவில் ஆரம்பித்த கடல் வழி போராட்டம் யாழில் நிறைவு!
மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தக்கோரி முல்லைத்தீவில் ஆரம்பித்த போராட்டம் பருத்தித்துறை துறைமுகத்தை வந்தடைந்தது. முல்லைத்தீவு கள்ளப்பாடு கடற்கரையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 7.15 மணியளவில் ஆரம்பித்த கடல்வழியான கண்டனப் போராட்டம் யாழ்ப்பாணம் பருத்தித்துறை துறைமுகத்தை 9.30 மணியளவில் வந்தடைந்தது. இழுவை மடி மீன்பிடிமேலும் படிக்க...
நிருபமா ராஜபக்ஷவின் சொத்து விபரங்களை வெளியிடுமாறு ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் கோரிக்கை!
பண்டேரா பேப்பர்ஸ் சர்ச்சையில் சிக்கியுள்ள முன்னாள் பிரதியமைச்சர் நிருபமா ராஜபக்ஷவின் சொத்து விபரங்களை வெளிப்படுத்துமாறு ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பு 3 தகவல் அறியும் உரிமை விண்ணப்பப்படிவங்களைத் தாக்கல் செய்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழு, நாடாளுமன்றம் மற்றும் ஜனாதிபதி அலுவலகத்திற்கே இவை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. 1975மேலும் படிக்க...
இரு வாரத்தில் 7 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை
ஒக்டோபர் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களுக்குள் 7 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக சரிந்த சுற்றுலாத் துறை இப்போது படிப்படியாக மீண்டு வருகிறது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி, இந்தமேலும் படிக்க...
தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைய அனைவரும் ஒன்றுபட வேண்டும் – சசிகலா
தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைய எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் அனைவரும் ஒன்றுபட்டு பாடுபட வேண்டும் என சசிகலா தெரிவித்துள்ளார். சென்னை இராமாபுரத்திலுள்ள எம்.ஜி.ஆர். இல்லத்தில் எம்ஜி.ஆரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் உரையாற்றிய சசிகலா, நாம் ஒன்றாகமேலும் படிக்க...