Main Menu

சூடானில் ஆறு தூதர்கள் பதவி நீக்கம்: ஜனநாயக ஆதரவு எதிர்ப்பாளர்கள் மீது பாதுகாப்புப் படைகள் தாக்குதல்!

சூடானின் ஆளும் இராணுவம், ஆறு தூதர்களை பதவி நீக்கம் செய்துள்ளது மற்றும் பாதுகாப்புப் படைகள் ஜனநாயக ஆதரவு எதிர்ப்பாளர்கள் மீதான ஒடுக்குமுறையை கடுமையாக்கியுள்ளன.

அரச ஊடகங்களில் நேற்று (புதன்கிழமை) பிற்பகுதியில் அறிவிக்கப்பட்ட இந்த முடிவானது, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், சீனா, கட்டார், பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கான சூடானின் தூதர்கள் மற்றும் சுவிஸ் நகரமான ஜெனீவாவுக்கான நாட்டின் தூதரகத்தின் தலைவர் ஆகியோரை உள்ளடக்கியது.

கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நீண்டகால ஆட்சியாளரான உமர் அல்-பஷீர் மக்கள் எழுச்சியில் அகற்றப்பட்டதைத் தொடர்ந்து, ஜனநாயகத்தை நோக்கிய சூடானின் பலவீனமான மாற்றத்தைத் தடம் புரட்ட திங்களன்று நடந்த ஆட்சிக்கவிழ்ப்பை, இராணுவம் பின்வாங்குவதற்கான கோரிக்கைகள் அதிகரித்து வருகின்றன.

இதனிடையே, ஆபிரிக்க ஒன்றியம் சூடான் நாட்டின் குடிமக்கள் தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தை மீட்டெடுக்கும் வரை முகாமின் நடவடிக்கைகளில் இருந்து இடைநிறுத்துவதற்கான முடிவை நேற்று அறிவித்தது

அதே நேரத்தில் வேர்ட் வங்கி உதவியை முடக்கியது மற்றும் அமெரிக்கா 700 மில்லியன் டொலர்கள் அவசர உதவியை நிறுத்தியது.

கார்ட்டூமில் உள்ள பல மேற்கத்திய தூதரகங்களும் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் அப்தல்லா ஹம்டோக் மற்றும் அவரது அமைச்சரவையை சூடானின் ‘இடைநிலை அரசாங்கத்தின் அரசியலமைப்புத் தலைவர்கள்’ என்று தொடர்ந்து அங்கீகரிப்பதாகக் கூறியுள்ளன.

இதற்கிடையில், இராணுவத்தின் அதிகார அபகரிப்பைக் கண்டிக்கும் போராட்டங்கள் தலைநகர் கார்ட்டூமிலும் மற்றும் பிற இடங்களிலும் தொடர்ந்தன. ஒரு சிவில் ஒத்துழையாமை பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக வேலைநிறுத்தங்களுக்கான அழைப்புகளுக்கு பதிலளிக்கும் விதமாக பல வணிகங்கள் மூடப்பட்டன.

நூற்றுக்கணக்கான எதிர்ப்பாளர்கள் கார்டூமின் கிழக்கு மாவட்டமான புரியில் வீதி தடுப்புகளை அகற்றும் பாதுகாப்புப் படையினர் மீது கற்களை வீசினர். அதே நேரத்தில் தலைநகரின் வடக்கில், பாதுகாப்புப் பணியாளர்கள் டசன் கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகை மற்றும் ரப்பர் தோட்டாக்களை வீசினர்.

ஹம்டோக்கிற்கு இன்னும் விசுவாசமாக இருக்கும் தகவல் அமைச்சகம் ஒரு அறிக்கையில், ‘கவச வாகனங்கள் மற்றும் ஆண்களால் கவச வாகனங்கள் மற்றும் வீதிகள் முற்றுகையிடப்பட்டுள்ளன’ என்று கூறியது. ‘பெண்கள் தரையில் இழுத்துச் செல்லப்பட்டனர்’ என்றும் குற்றம் சாட்டியுள்ளது.

பகிரவும்...