Main Menu

சில அமைப்புகள் அரசுக்கு எதிராக போராட கூடாது – மத்திய அரசு அறிவிப்பு!

வெளிநாட்டு நிதி உதவிகளை பெறும் அமைப்புகள் அரசுக்கு எதிராக இனி போராட்டம் செய்யக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் செயற்படும் அமைப்புகள்,  மாணவர் சங்கங்கள்,  விவசாயிகள் உள்ளிட்டோர் வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி பெறுவதற்கான வழிமுறைகளில் மத்திய அரசு  மாற்றம் கொண்டு வந்துள்ளது.

அதன்படி வெளிநாட்டு நிதி உதவிகளை பெறும் அமைப்புகள் அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட கூடாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.

அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகளில் கலந்து கொள்ளும் விவசாயிகள் மற்றும் மாணவர் சங்கங்கள் வெளிநாட்டு நிதி உதவியினை பெற முடியாது என மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...