Main Menu

சிங்கப்பூரில் ஒரே நாளில் 528 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று!

ஆசியாவிலேயே கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக மாறிவரும் சிங்கப்பூரில், இன்று (செவ்வாய்க்கிழமை) ஒரே நாளில் 528 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் புதிதாக கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிப்புக்குள்ளானோர் குறித்து சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் சிங்கப்பூரில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 14,951ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் 14பேர் உயிரிழந்துள்ளனர். 13,842பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1095பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

சிங்கப்பூர் குடிமக்கள் மற்றும் நிரந்தர வசிப்புரிமை பெற்றவர்களில் குறைந்த மக்களுக்கே வைரஸ் தொற்று உள்ளதாகவும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கே அதிக வைரஸ் பாதிப்பு இருப்பதாகவும் சிங்கப்பூர் சுட்டிக்காட்டியுள்ளது.

பகிரவும்...