Day: April 28, 2020
ஜோதிகா அப்படி பேசியதில் எந்த தவறும் இல்லை!
நடிகை ஜோதிகா கோவில்களுக்கு செலவிடும் அதே தொகையை மருத்துவமனைகளுக்கும், பள்ளிகளுக்கும் கொடுங்கள் என்று பேசியது எதிர்ப்பை கிளப்பியது. ஜோதிகாவை நடிகர் எஸ்.வி.சேகர், நடிகை காயத்ரி ரகுராம் ஆகியோர் கண்டித்தனர். இந்த நிலையில் ஜோதிகா பேச்சுக்கு நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் ஆதரவு தெரிவித்துமேலும் படிக்க...
பாடசாலைகளைத் தனிமைப்படுத்தல் நிலையங்களாக மாற்றுவதற்கு முல்லைத்தீவில் மக்கள் எதிர்ப்பு!
பாடசாலைகளை தனிமைப்படுத்தல் நிலையங்களாக மாற்றப்படுவதற்கு எதிராக முல்லைத்தீவில் எதிர்ப்பு நடவடிக்கைகள். கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுபவர்களை தனிமைப்படுத்தி கண்காணிப்பதற்கான நிலையங்களாக முல்லைத்தீவு மாவட்டத்தின் சில பாடசாலைகள் தெரிவுசெய்யப்பட்டு சில பாடசாலைகளின் தளபாடங்கள் மற்றும் ஆவணங்களும் சீரமைக்கப்பட்டும் அகற்றப்பட்டும் உள்ளது. தனிமைப்படுத்தல்மேலும் படிக்க...
இயல்பு நிலைக்குத் திரும்ப நீண்ட காலமாகும்: ட்ரூடோ கருத்து
எல்லா கனேடியர்களுக்கும் இயல்பு நிலைக்குத் திரும்ப நீண்ட காலமாகும் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். ரைடோ காட்டேஜின் முன்புறம் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும்மேலும் படிக்க...
ஜேர்மனியில் கொரோனா வைரஸ் தொற்று வீதம் அதிரித்துள்ளது!
ஜேர்மனியில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட பிறகு கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று வீதம் அதிரித்துள்ளது. ஜேர்மனியில் இந்த மாத தொடக்கத்தில் 0.7ஆக இருந்த தொற்று வீதம், தற்போது 1.0 ஆக உயர்ந்துள்ளது. இதனால், ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ள போதும், மக்கள் முடிந்தவரைமேலும் படிக்க...
சிங்கப்பூரில் ஒரே நாளில் 528 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று!
ஆசியாவிலேயே கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக மாறிவரும் சிங்கப்பூரில், இன்று (செவ்வாய்க்கிழமை) ஒரே நாளில் 528 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் புதிதாக கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிப்புக்குள்ளானோர் குறித்து சுகாதாரமேலும் படிக்க...
ஒகஸ்ட் மாதம் வைரஸ் தொற்று அதிக எண்ணிக்கையை எட்டும்: தென்னாபிரிக்க மக்களுக்கு எச்சரிக்கை!
எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் வைரஸ் தொற்று அதிக எண்ணிக்கையை சென்றடையும் நிலைக்கு தள்ளப்படுவோம் என தென்னாபிரிக்க ஜனாதிபதி சிரில் ராமபோசா, நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆகையால், ஊரடங்கு தளர்த்தப்படுவதால் மக்கள் யாரும் அதிக நம்பிக்கை அடைய வேண்டாம் என அவர்மேலும் படிக்க...
கொரோனா – தமிழகத்தில் இதுவரை 111 குழந்தைகள் பாதிப்பு
விழுப்புரத்தில் 1 வயது குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை 111 குழந்தைகளிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 52 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கும் கொரோனா தொற்றுமேலும் படிக்க...
மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் நாளை ஆலோசனை
ஊரடங்கு மே 3ஆம் திகதியுடன் முடிவுக்கு வரும் நிலையில், மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை(புதன்கிழமை) ஆலோசனை நடத்தவுள்ளார். கொரோனா தடுப்பு பணிகளை ஒருங்கிணைக்க அமைக்கப்பட்ட, ஐஏஎஸ் அதிகாரிகள் குழுக்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார். கொரோனாமேலும் படிக்க...
தற்போதுள்ள அச்சமான சூழலில் இராணுவத்தினருக்கு பாடசாலைகளை வழங்கமுடியாது
அரசாங்கம் தற்போது பாடசாலைகளிலும் ஏனைய கல்வி நிறுவனங்களிலும் இராணுவத்தினரை தங்கவைப்பதற்கான செயற்பாட்டை முன்னெடுத்து வருவதால் மக்கள் மத்தியில் அச்சநிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்துள்ளார். தென்னிலங்கையில் பாடசாலைகள் சிலவற்றை இராணுவத்தினர் சில தேவைகளுக்கு இதற்கு முன்னர்மேலும் படிக்க...
எதிர்பார்த்த பரீட்சை பெறுபேறு கிடைக்காததால் முல்லைத்தீவில் மாணவி எடுத்த தவறான முடிவு !
நேற்றையதினம் வெளியிடப்பட்ட கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையில் தான் எதிர்பார்த்த பெறுபேறுகள் கிடைக்காததால் மன விரக்தி அடைந்த மாணவி ஒருவர் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துள்ளார் . இந்த சம்பவம் முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் இன்றையதினம் (28) இடம்பெற்றுள்ளதுமேலும் படிக்க...
COVID 19 க்கான தகவல்களுக்காக தேசிய இணையதளம்
COVID 19 க்கான தகவல்களுக்காக www.covid19.gov.lk என்ற பெயரில் தேசிய இணையதளம் ஒன்று இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனமான ICTA ஆரம்பித்துள்ளது. அரசாங்கத்தின் நிலையான நிறுவனங்களுடன் ஒன்றிணைந்து COVID 19 தொடர்பான தகவல்களை பொதுமக்களுக்காக தேசிய இணையதளமொன்றைமேலும் படிக்க...