Main Menu

‘சார்வரி’ – தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்கள்! – மேஷம் முதல் மீனம் வரை

மேஷம் தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்கள்

சின்னச்சின்ன விஷயங்களையும் கூர்ந்து கவனிக்கும் நீங்கள், ஒவ்வொரு செயலையும் மற்றொன்றுடன் ஒப்பிட்டுப்பார்ப்பதில் வல்லவர்கள். இந்த சார்வரி ஆண்டு உங்களின் ராசிக்கு ஒன்பதாவது ராசியில் பிறப்பதால் புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். அழகு, ஆரோக்கியம் மேம்படும். கடினமான இலக்கையும் எளிதாக எட்டிப்பிடிப்பீர்கள். கடன் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும். வீடு, வாகனம் போன்ற அடிப்படை வசதிகள் பெருகும். நாடாளுபவர்களின் நட்பும் புகழும் கிடைக்கும். பணபலம் கூடும். குடும்பத்தாரின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, அதற்கேற்ப வளைந்துகொடுப்பீர்கள். கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும்.

14.4.2020 முதல் 25.12.2020 வரை சனி 9-ம் வீட்டில் நிற்பதால் வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். தடைகளெல்லாம் நீங்கும். 26.12.2020 முதல் 10-ம் வீட்டுக்கு சனி வருவதால் தந்தையின் உடல்நிலை சீராகும். அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் புது வேலை கிடைக்கும். கௌரவப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.

ஆண்டு தொடக்கம் முதல் 07.7.2020 வரை குரு பகவான் உங்களின் ராசிக்கு 10-ம் வீடான மகர ராசியில் அதிசாரமாகி அமர்ந்திருப்பதால் புதுத்தெம்பு பிறக்கும். யாருக்கும் எந்த வாக்குறுதியும் தர வேண்டாம். 8.7.2020 முதல் 12.11.2020 வரை குரு பகவான் 9-ம் வீட்டில் நிற்பதால் உங்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தியடையும். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். புது வீடு கட்டி குடிபுகுவீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். குடும்பத்துக்காக நேரம் ஒதுக்குவீர்கள். குழந்தை பாக்கியம் சிலருக்குக் கிடைக்கும்.

குடும்பத்துடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உறவினர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். பால்ய நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். குடும்பத்தினரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சொந்த ஊரில் மதிப்பு மரியாதை கூடும். 13.11.2020 முதல் ஆண்டு முடியும் வரை குரு பகவான் உங்களின் ராசிக்கு 10-ம் வீடான மகர ராசிக்கு வருவதால் சிறு சிறு விமர்சனங்களும், வீண் பழியும் வரலாம்; கவனமாக இருப்பது நல்லது. வங்கிக் கணக்கில் போதிய பணம் இருக்கிறதா என்று பார்த்துவிட்டு, காசோலை தரவும்.

சித்திரை, ஆவணி, புரட்டாசி, தை, மாசி மாதங்களில் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். மனக்குழப்பங்கள் நீங்கித் தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். வரவேண்டிய பணம் வந்துசேரும். பிள்ளைகளின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றுவீர்கள். உங்களின் மகளுக்கு ஏதோ ஒரு வகையில் தடைப்பட்டுக் கொண்டிருந்த திருமணம் இப்போது கூடிவரும். உறவினர்கள், நண்பர்கள் வியக்கும்படி கல்யாணத்தைச் சிறப்பாக நடத்திமுடிப்பீர்கள். சொத்துப் பிரச்னைகளில் அனுகூலமான நிலை உருவாகும். விலையுயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். பழைய சிக்கல்களைப் புதிய கோணத்தில் அணுகி வெற்றி காண்பீர்கள்.

செப்டம்பர் மாதம் முதல் ராகு உங்கள் 2-ம் வீட்டுக்கு வருவதால் பேச்சில் கவனம் தேவை. அவசர முடிவுகளைத் தவிர்க்கப் பாருங்கள். யாரையும் நம்பி முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். ராசிக்கு 8-ம் வீட்டுக்கு கேது வருவதால் வீண் பழி, மன உளைச்சல் வரக்கூடும். கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. சுபச் செலவுகள் அதிகரிக்கும்.

23.10.2020 முதல் 17.11.2020 வரை உள்ள காலகட்டத்திலே சுக்கிரன் 6-ம் வீட்டில் மறைவதால் கணவன் மனைவிக்குள் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.

18.06.2020 முதல் 12.8.2020 வரை உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டிலேயே செவ்வாய் அமர்வதால் உறவினர்களுடன் மோதல் வந்து விலகும். தவிர்க்க முடியாத செலவுகளும் பயணங்களும் ஏற்படும்.

வியாபாரத்தில் ஆவணி, புரட்டாசி மாதங்களில் வரவு உயரும். வராது என்றிருந்த பாக்கி வந்து சேரும். பழைய வாடிக்கையாளர்கள் மீண்டும் உங்கள் கடையைத் தேடி வருவார்கள். புதிதாக முதலீடு செய்து போட்டியாளர்களைத் திக்குமுக்காட வைப்பீர்கள். கடையை நவீனமயமாக்குவீர்கள். பணியாளர்கள் உறுதுணையாக இருப்பார்கள். புகழ்பெற்ற நிறுவனங் களுடன் புது ஒப்பந்தங்கள் வந்து சேரும். வி.ஐ.பிக்களும் வாடிக்கையாளர்களாவார்கள்.

உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் இருந்த மனக்கசப்புகள் விலகும். இந்த வருடம் தொடங்கும்போது சுக்கிரன் 2-ம் வீட்டில் அமர்வதால் வேலைச்சுமை குறையும். இழந்த உரிமையைப் பெறுவீர்கள். பெரிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். தை, மாசி மாதங்களில் மேலதிகாரிகள் உங்களை நம்பி புதிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். எதிர் பார்த்தபடி சம்பளம் உயரும். புது சலுகைகளும் உண்டு. உடன்பணிபுரிபவர்களும் உங்களுக்கு மதிப்பளிப்பார்கள் என்றாலும் 26.12.2020 முதல் சனி 10-ம் வீட்டில் அமர்வதால் அலுவலகம் மற்றும் மூத்த அதிகாரிகள் பற்றிய ரகசியங்களை வெளியிட வேண்டாம்.

கலைஞர்களின் படைப்புகளுக்கு மதிப்பு மரியாதை கூடும். அரசு விருது கிடைக்கும். மூத்த கலைஞர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.

பெண்களின் கனவுகள் நனவாகும். நல்ல இடத்தில் வரன் அமையும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நல்ல வேலை கிடைக்கும். அயல்நாட்டில் உயர்கல்வி உண்டு.

மாணவ மாணவியரின் நினைவாற்றல் பெருகும். சோம்பல் நீங்கி இனி சுறுசுறுப்பாவீர்கள். அதிக மதிப்பெண் பெறுவீர்கள்.

இந்தப் புத்தாண்டு உங்களின் குறிக்கோள் களை நிறைவேற்றுவதாகவும் வசதிகளைத் தருவதாகவும் அமையும்.

பரிகாரம்

திருச்செந்தூர் முருகப்பெருமானை சஷ்டி திதியிலோ அல்லது வியாழக்கிழமைகளிலோ சென்று தரிசிப்பது நல்லது. முடிந்தால் கந்தசஷ்டி கவசம் தினமும் படியுங்கள். ஆதரவற்ற மாணவியின் கல்விக் கட்டணத்தைச் செலுத்துங்கள்.

ரிஷபம் தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்கள்

எண்ணுவதை எழுத்தாக்கும் படைப்பாற்றல் கொண்ட நீங்கள், உழைப்பைத் தவிர வேறு எதையும் நம்பாதவர்கள். உங்களின் ராசிநாதன் சுக்கிரன் ராசியில் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த சார்வரி ஆண்டு பிறப்பதால் உங்களின் புத்திசாலித்தனம் வெளிப்படும். பணவரவு உண்டு. வீட்டைக் கட்டி முடிக்க எதிர்பார்த்த வங்கிக் கடன் உதவி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். விலையுயர்ந்த சமையலறைச் சாதனங்கள் வாங்குவீர்கள். நட்பு வட்டம் விரிவடையும். திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். உடன்பிறந்தவர்களால் நிம்மதி அடைவீர்கள்.

ஆனி, ஆடி, ஆவணி மாதங்களில் எதிர்பாராத திடீர் யோகம் உண்டாகும். அதிகாரம் மிக்க பதவிகள் தேடி வரும். குடும்பத்தில் நிலவிவந்த கூச்சல் குழப்பங்கள் விலகும். கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் பிறக்கும். உங்களின் பேச்சுக்கு சமூகத்தில் மரியாதை கூடும். தடைப்பட்டுக் கொண்டிருந்த சுப நிகழ்ச்சிகள் இனிதே நடந்தேறும்.

14.4.2020 முதல் 25.12.2020 வரை சனி பகவான் அஷ்டம சனியாக இருப்பதால் யாரையும் விமர்சித்துப் பேசாதீர்கள். பண இழப்பு, காரியத் தடைகள் ஏற்படலாம்.

26.12.2020 முதல் 9-ம் வீட்டுக்கு சனி வருவதால் தன்னம்பிக்கை துளிர்விடும். வழக்குகள் சாதகமாகும். வீண் அலைச்சல், பல வேலைகளை இழுத்துப்போட்டுப் பார்க்கும் நீங்கள், இனி நேரம் கடந்து சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்கள் சாதகமாகும். பாதியில் நின்று போன கட்டட வேலைகளை முழுமையாக முடித்து புது வீட்டில் குடிபுகுவீர்கள். அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். நீண்டகாலமாகப் போகாமல் இருந்த குலதெய்வக் கோயிலுக்குக் குடும்பத்துடன் சென்று வருவீர்கள்.

14.4.2020 முதல் 7.7.2020 வரை குரு பகவான் உங்களின் ராசிக்கு

9 – ம் வீடான மகர ராசியில் அதிசாரமாகி அமர்வதால் மன இறுக்கங்கள் குறையும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். குழந்தை பாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு இப்போது கூடி வரும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுப நிகழ்ச்சிகளெல்லாம் நடந்தேறும்.

8.7.2020 முதல் 12.11.2020 வரை உங்களின் ராசிக்கு 8-ம் வீட்டில் குரு இருப்பதால் மறைமுக எதிரிகள் முளைப்பார்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். முன்கோபத்தைத் தவிர்ப்பது நல்லது.

13.11.2020 முதல் வருடம் முடியும் வரை உங்களின் பாக்கியஸ்தானமான 9-ம் வீட்டில் குரு நுழைவதால் இடையூறுகளைக் கடந்து வெற்றி பெறுவீர்கள். சில இடங்களில், சில நேரங்களில் அமைதியாக இருந்து காரியம் சாதிப்பீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டாகும்.

குடும்பத்தில் தள்ளிப்போன சுப நிகழ்ச்சி களெல்லாம் ஏற்பாடாகும். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் நல்ல வேலை கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் அடங்கும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். சொத்து வாங்கும் யோகம் சிலருக்கு உண்டாகும்.

1.9.2020 முதல் கேது 7-ம் வீட்டில் அமர்வதால் வாழ்க்கைத்துணையின் உடல் நிலையில் கவனம் செலுத்துங்கள். உறவினர்களுடன் மனக்கசப்பு வந்து நீங்கும். சுபச் செலவுகள் அதிகரிக்கும். அண்டை மாநில புண்ணியஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வழக்குகளில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். வீடு வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். பூர்வீகச் சொத்துப் பிரச்னை தீரும்.

மாசி, பங்குனி மாதங்களில் குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிக்கு வாரிசு உருவாகும். வர வேண்டிய பணமும் சரியான நேரத்தில் வந்து சேரும்.

17.11.2020 முதல் 12.12.2020 வரை உங்கள் ராசிநாதன் சுக்கிரன் 6-ம் வீட்டில் மறைவதனால் பயணங்களில் கவனமாக இருப்பது நல்லது.

வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து லாபத்தைப் பெருக்குவீர்கள். ஆனி, ஆடி மாதங்களில் இரட்டிப்பு லாபம் உண்டு. பழைய பாக்கிகள் வசூலாகும். கொடுக்கல் வாங்கலில் சுமுகமான நிலை காணப்படும். புது வேலையாட்களையும் பணியில் அமர்த்துவீர்கள். தை, மாசி, பங்குனி மாதங்களில் புதிய முதலீடு செய்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.

உத்தியோகத்தில் உங்களின் திறமை, உழைப்புக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். மேலதிகாரியின் கழுகுப் பார்வை இனி கனிவுப் பார்வையாக மாறும். தை, மாசி, பங்குனி மாதங்களில் எதிர்பார்த்தபடி பதவி உயர்வு, சம்பள உயர்வு உண்டு. சக ஊழியர்கள் ஒத்துழைப்பு தருவார்கள்.

கலைஞர்கள் அரசாங்கத்தால் கௌரவிக்கப் படுவார்கள். மூத்த கலைஞர்களிடம் தொழில் நுணுக்கங்களைக் கேட்டறிவீர்கள். சம்பள பாக்கி கைக்கு வரும்.

பெண்கள் பெற்றோரின் பாசமழையில் நனைவார்கள். ஆடை அணிகலன்கள் சேரும். உயர்கல்வியில் விடுபட்ட பாடத்தில் வெற்றி யுண்டு. கல்யாணம் சிறப்பாக நடந்து முடியும்.

மாணவ மாணவியர் புத்தகத்தைத் திறந்தாலே தூக்கம் வந்த நிலை மாறும். மதிப்பெண் கூடும். எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் சேர்வீர்கள். அயல்நாடு சென்று படிக்கும் வாய்ப்பும் தேடி வரும்.

இந்த சார்வரி வருடம் வேலைச்சுமையையும், திடீர்ப் பயணங்களையும் தந்தாலும், பண வரவையும் கௌரவத்தையும் தருவதாக அமையும்.

பரிகாரம்

செங்கல்பட்டு அருகிலுள்ள திருமலைவையாவூரில் வீற்றிருக்கும் ஸ்ரீபிரசன்ன வேங்கடேசப் பெருமாளை ஏகாதசி திதி நாளில், புதன் அல்லது வெள்ளிக்கிழமைகளில் துளசி மாலை அணிவித்து வணங்குங்கள். வாய்பேச இயலாதவர்களுக்கு உதவுங்கள்.

மிதுனம் தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்கள்

எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என்ற எண்ணம்கொண்ட நீங்கள், நீதி கிடைக்கும் வரை ஓயமாட்டீர்கள். உங்களின் ராசிக்கு 7-வது ராசியில் இந்த சார்வரி ஆண்டு பிறப்பதால், பாதியில் நின்ற பல வேலைகள் இனி முழுமையாக முடியும். திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வி.ஐ.பிக்கள், கல்வியாளர்கள் அறிமுகமாவார்கள்.

உங்கள் ராசியை சந்திரன் பார்த்துக்கொண்டிருக்கும்போது இந்த ஆண்டு பிறப்பதால் மன இறுக்கம் குறையும். திட்டமிட்டுச் செயல்படுவீர்கள். வேலையில்லாதவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பழைய சிக்கல்களுக்குத் தீர்வு கிடைக்கும். பணவரவு கூடும். கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். சொந்த ஊரில் மதிக்கப்படுவீர்கள். பொது விழாக்கள், திருமணம், கிரகப்பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள்.

14.04.2020 முதல் 25.12.2020 வரை 7-ம் வீட்டில் சனி பகவான் தொடர்வதால் கோபத்தைக் குறைத்துக்கொள்வது நல்லது. வாழ்க்கைத்துணையின் உடல்நிலையில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். 26.12.2020 முதல் அஷ்டம சனி தொடங்குவதால், பணப்பற்றாக்குறை வரலாம். யாருக்காகவும் சாட்சி, ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம்.

14.04.2020 முதல் 7.7.2020 வரை குரு பகவான் உங்களின் ராசிக்கு 8- ம் வீடான மகர ராசியில் அதிசாரமாகி அமர்ந்திருப்பதால் எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். பணப் பற்றாக்குறை, வீண் அலைச்சல் வந்து செல்லும்.

8.7.2020 முதல் 12.11.2020 வரை குரு பகவான் 7-ம் வீட்டிலேயே தொடர்வதால் அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளாலும், நண்பர்கள், உறவினர்களின் வருகையாலும் வீடு களைகட்டும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். அவ்வப்போது வரும் சிறு சிறு வாக்குவாதங்களைப் பெரிதுபடுத்த வேண்டாம். குழந்தை பாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். பிள்ளைகள் உங்களைப் பெருமைப்படுத்துவார்கள். மகளுக்கு எதிர்பார்த்தபடி நல்ல வரன் அமையும். மகனுக்கு நல்ல வேலை கிடைக்கும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். பூர்வீக வீட்டை உங்களின் ரசனைக்கேற்ப புதுப்பிப்பீர்கள். விலையுயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

13.11.2020 முதல் வருடம் முடியும் வரை ராசிக்கு 8-ம் வீட்டில் சென்று குரு பகவான் மறைவதால் வீண் அலைச்சல், ஒருவித பய உணர்வு வந்து போகும். பிள்ளைகளிடம் எதிர் மறையாகப் பேச வேண்டாம். அவர்களிடம் கனிவாக நடந்துகொள்ளுங்கள்.

1.09.2020 முதல் ராகு உங்களின் ராசியை விட்டுவிலகுவதால் நெருக்கடிகள் விலகும். பயம் விலகும். அழகு, ஆரோக்கியம் கூடும். கேது 6-ம் வீட்டில் நுழைவதால் வழக்கு வெற்றியடையும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வீண் அலைச்சல் குறையும். வெளிவட்டாரத்தில் உங்களை எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். பெரிய பதவிகள் தேடிவரும். திருவிழாக்களை முன்னின்று நடத்துவீர்கள். வெளிமாநில புண்ணியத்தலங்கள் சென்று வருவீர்கள்.

ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, பங்குனி மாதங்களில் எதிர்பாராத பணவரவு, திடீர் யோகம் என எதிலும் வெற்றி கிடைக்கும். செலவுகளைக் குறைத்து சிக்கனத்துடன் சேமிக்கத் தொடங்குவீர்கள். பழைமையான 12.12.2020 முதல் 05.1.2021 வரை 6-ம் வீட்டிலே சுக்கிரன் மறைவதனால் கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. விலையுயர்ந்த பொருள்களை இரவல் வாங்கவோ, தரவோ வேண்டாம்.

14.4.2020 முதல் 03.5.2020 வரை செவ்வாய் உங்களின் ராசிக்கு 8-ம் வீட்டில் அமர்வதால் மனைவியின் உடல்நலனில் கவனமாக இருங்கள்.

வியாபாரத்தில் சில புதிய அனுபவங்கள் கிடைக்கும். சித்திரை, வைகாசி மாதங்களில் கடையை வேறு இடத்துக்கு மாற்றுவீர்கள். தேங்கிக் கிடந்த சரக்குகளைத் தள்ளுபடி விலைக்கு விற்று முடிப்பீர்கள். புது வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். ஆவணி மாதத்தில் புது ஒப்பந்தங்கள் தேடி வரும். கார்த்திகை, பங்குனி மாதங்களில் பழைய பாக்கிகள் வசூலாகும். இரும்பு, உணவு, ரியல் எஸ்டேட், பதிப்பகம், சிமென்ட் வகைகளால் லாபம் கிடைக்கும்.

உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். மூத்த அதிகாரிகள் உங்களின் ஆலோசனையை ஏற்றுக்கொள்வார்கள். ஆவணி, கார்த்திகை மாதங்களில் புதிய வாய்ப்புகள், பொறுப்புகள் தேடி வரும். உங்களின் திறமைகளை வெளிப்படுத்த புதிய வாய்ப்பு கிடைக்கும். வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் ஆதாயம் அடைவீர்கள். அலுவலக ரகசியங்களை வெளியிடாமல் இருப்பது நல்லது. பங்குனி மாதத்தில் பதவி உயர்வை எதிர்பார்க்கலாம். பழைய சம்பள பாக்கியும் கைக்கு வரும்.

கலைஞர்களின் புகழ் கூடும். சம்பள பாக்கி கைக்கு வரும். அரசு வகையில் அனுகூலம் உண்டு. மூத்த கலைஞர்களிடம் விட்டுக் கொடுத்துப் போங்கள்.

பெண்கள் உயர்கல்வியில் வெற்றிபெறுவார்கள். எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலையும் கிடைக்கும். வருட மத்தியில் திருமணம் முடியும்.

மாணவ மாணவியர் தங்களின் விளையாட்டுத் தனத்தைக் குறைத்து வகுப்பறையில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். ஆசிரியர்கள் பக்க பலமாக இருப்பார்கள். உயர்கல்வியில் வெற்றி யுண்டு. கணிதம், மொழிப் பாடங்களுக்கு அதிக நேரம் ஒதுக்குங்கள். மதிப்பெண் உயரும். விரும்பிய படிப்பில் சேருவீர்கள்.

இந்த புத்தாண்டு, முதல்முயற்சியில் எதையும் முடிக்க முடியாமல் போனாலும் தொடர்முயற்சியால் சாதிப்பீர்கள்.

பரிகாரம்

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், புங்கமுத்தூரில் அருள்பாலிக்கும் துர்கை அம்மனை செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் எலுமிச்சைப் பழ தீபம் ஏற்றி வணங்குங்கள். புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள் நல்ல பலன்கள் கிடைக்கும்.

கடகம் தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்கள்

வெளிப்படையாக மற்றவர்களைச் சில நேரங்களில் விமர்சிக்கும் நீங்கள், மனிதநேயம் மிக்கவர்கள். உங்களின் ராசிக்கு 6-ம் வீடான தனுசு ராசியில் சார்வரி ஆண்டு பிறப்பதால் எதையும் சாதித்துக்காட்டும் வல்லமை பெறுவீர்கள். உங்களையும் அறியாமல் உங்களை அழுத்திக்கொண்டிருந்த அலட்சியப் போக்கு விலகும். பழைய கடனை பைசல் செய்வீர்கள். உங்களுக்குள்ளே தன்னம்பிக்கை, தைரியம் பிறக்கும். தொலைநோக்கு சிந்தனை அதிகரிக்கும். வழக்குகளிலிருந்த தேக்க நிலை மாறும்.

14.4.2020 முதல் 25.12.2020 வரை சனி பகவான், தனுசு ராசியில் நிற்பதால் வெளிவட்டாரத்தில் புகழ், கௌரவம் ஒருபடி உயரும். உங்களின் உதவியால் வளர்ச்சியடைந்தவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். உயர்பதவியில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு.

26.12.2020 முதல் வருடம் முடியும் வரை 7-ம் வீடான மகர ராசியில் சனி, கண்டகச் சனியாக அமர்வதால் பண விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம்.

14.4.2020 முதல் 7.7.2020 வரை குரு பகவான் உங்களின் ராசிக்கு 7-ம் வீடான மகர ராசியில் அதிசாரமாகி அமர்வதால் உங்களின் திறமைகள் வெளிப்படும். தள்ளிப்போன காரி யங்கள் விரைந்து முடியும். நட்பு வட்டம் விரிவடையும்.

8.7.2020 முதல் 12.11.2020 வரை குரு பகவான் 6-ம் வீட்டிலேயே மறைந்திருப்பதால் குடும்பத்தினரை அனுசரித்துச்செல்வது நல்லது. யாரையும் யாரிடத்திலும் பரிந்துரை செய்ய வேண்டாம்.

13.11.2020 முதல் வருடம் முடியும் வரை குரு பகவான் உங்களின் ராசிக்கு 7-ம் வீட்டில் நுழைவதால் போட்டி, பொறாமைகள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்குக் குறைவிருக்காது. கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேருவார்கள். உங்களுக்குள் கலகமூட்டியவர்களை ஒதுக்கித் தள்ளுவீர்கள். குழந்தை பாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும்.

1.9.2020 முதல் ராகு லாப வீட்டில் நுழைவதால் எதிலும் வெற்றியே கிடைக்கும். ரியல் எஸ்டேட் துறை மூலம் பணம் வரும். பூர்வீகச் சொத்துகளை மீட்பீர்கள். உறவினர்கள் வியக்கும்படி உங்களின் வாழ்க்கைத் தரம் உயரும். ஆடை ஆபரணங்கள் சேரும். எந்த ஒரு விஷயத்திலும் தெளிவான முடிவெடுப்பீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை அடைப்பீர்கள். திடீர்ப் பணவரவு உண்டு. இந்த நேரத்தில் கேது உங்களின் ராசிக்கு 5-ம் வீட்டில் இருப்பதால் பிள்ளைகள் பிடிவாதமாக நடந்து கொள்வார்கள். யாரையும் விமர்சித்துப் பேச வேண்டாம். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் கூடுதலாகும். குடும்பத்தில் சுபச் செலவுகள் இருந்து கொண்டேயிருக்கும். விருந்தினர், உறவினர் வருகை அதிகரிக்கும்.

ஆவணி, புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் அரைகுறையாக நின்றுபோன பணிகளை முழு மூச்சுடன் முடிப்பீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பீர்கள். அரசு வகை காரியங்கள் வெற்றியடையும். பிள்ளைகளால் உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் பெருமையடைவீர்கள். சொந்த வீடு வாங்க முடியாமலிருந்தவர்கள் இப்போது வாங்குவார்கள். குடியிருக்கும் வீட்டில் கூடுதலாக ஓர் அறை அல்லது தளம் கட்டுவீர்கள்.

4.5.2020 முதல் 18.6.2020 வரை செவ்வாய் உங்களின் ராசிக்கு 8-ம் வீட்டில் மறைவதால் உணவில் கட்டுப்பாடு அவசியம். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம்.

5.1.2021 முதல் 29.1.2021 வரை உள்ள கால கட்டத்தில் உங்களின் ராசிக்கு 6-ம் வீட்டில் சுக்கிரன் இருப்பதால் உடல்நலனில் கவனமாக இருப்பது நல்லது. கணவன் மனைவிக்குள் வீண் வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நல்லது.

வியாபாரத்தில் புதிதாக வந்த போட்டியாளர் களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் உங்களின் அணுகுமுறையை மாற்றுவீர்கள். வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிக்கும். புரட்டாசி, மார்கழி, பங்குனி மாதங்களில் கூடுதல் லாபம் கிடைக்கும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். கணினி உதிரி பாகங்கள், ரியல் எஸ்டேட், ஏற்றுமதி இறக்குமதி வகைகளில் இழந்த பணத்தை மீட்பீர்கள். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களின் கோரிக்கைகளை ஏற்பீர்கள்.

உத்தியோகத்தில் உங்களைக் குறை கூறியவர்களே இப்போது மதித்து நடந்து கொள்வார்கள். உங்களின் சேவையை எல்லோரும் பாராட்டுவார்கள். மேலதிகாரிக்கு நெருக்கமாவீர்கள். இந்த ஆண்டு தொடங்கும் போது குரு 7-ம் வீட்டில் நிற்பதால் நீங்கள் கேட்ட இடமாற்றம் கிடைக்கும். வேலைச்சுமை அதிகரித்தாலும் விரைந்து முடிப்பீர்கள். மறைமுக எதிர்ப்புகள் இருந்தாலும் அதையெல்லாம் தகர்த்தெறிவீர்கள். எதிர்பார்த்த சலுகைகள் தாமதமானாலும் நிச்சயம் கிடைக்கும்.

கலைஞர்கள் திறமையை வளர்த்துக்கொள்ளும் முயற்சியில் இறங்குவார்கள். சம்பள பாக்கி கைக்கு வரும். பெரிய நிறுவனங்களில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். ஆண்டின் பிற்பகுதியில் அரசால் கௌரவிக்கப்படுவீர்கள்.

பெண்களுக்கு எதிர்பார்த்தபடி நல்ல இடத்தில் வரன் அமையும். வைகாசியில் தவறினால், தை மாதத்தில் திருமணம் நடந்தேறும். உயர்கல்வியில் விடுபட்ட பாடத்தை எழுதி வெற்றி பெறுவீர்கள்.

மாணவ மாணவியர் உற்சாகத்துடன் காணப்படுவார்கள். எதிர்பார்த்த பாடப்பிரிவில் சேருவீர்கள். நல்ல நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். உயர்கல்வியில் அதிக மதிப் பெண்ணுடன் வெற்றிபெறுவீர்கள்.

இந்த சார்வரி ஆண்டு, பணபலத்தை உயர்த்து வதாகவும் பழைய பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதாகவும் அமையும்.

பரிகாரம்

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் அருகில் திருபுவனம் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீகம்பகரேஸ்வரர் கோயிலில் உள்ள ஸ்ரீசரபேஸ்வரரை பிரதோஷ நாளில் சென்று நெய் விளக்கேற்றி வணங்குங்கள். ஏழை மாணவனுக்கு உதவுங்கள். நிம்மதி கிடைக்கும்.

சிம்மம் தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்கள்

மற்றவர்களின் மனநிலையை நொடிப்பொழுதில் புரிந்துகொள்ளும் அசாத்திய ஆற்றல் உள்ள நீங்கள், துவண்டுவருவோருக்குத் தோள் கொடுப்பீர்கள். உங்களின் ராசிக்கு 5-வது ராசியான தனுசு ராசியில் சார்வரி ஆண்டு பிறப்பதால் பழைய பிரச்னைகள், வழக்குகள், கடன் தொல்லைகளிலிருந்து விடுபடுவீர்கள். பிள்ளை வரம் வேண்டியிருந்தவர்களுக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

கணவன் மனைவி அந்நியோன்யம் பெருகும். மகனுக்கு நல்ல இடத்திலிருந்து பெண் அமைவார். மனக்குழப்பங்கள் விலகும். கனிவான பேச்சால் சண்டைச் சச்சரவுகள் குறையும். வீட்டில் சுபகாரியங்கள் சிறப்பாக நடந்தேறும். சொந்த ஊரில் மதிப்பு கூடும். கோயில் விழாக்களில் மரியாதை கிடைக்கும்.

இந்த ஆண்டு தொடக்கம் முதல் 25.12. 2020 வரை சனி 5-ம் வீட்டில் நிற்பதால் பிள்ளைகளிடம் அதிகம் கண்டிப்பு காட்டாதீர்கள். கர்ப்பிணிகள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம்.

26.12.2020 முதல் ஆண்டு முடியும் வரை சனி 6-ம் வீட்டிலேயே தொடர்வதால் பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். எதிர்பாராத வகையில் பணவரவு உண்டு. தாழ்வுமனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். பிள்ளைகளால் இருந்து வந்த பிரச்னைகள் நீங்கும். இழுபறியாக இருந்த வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். எதையோ இழந்ததைப் போல இருந்த நிலை மாறி முகம் மலரும். உற்சாகம் பிறக்கும். பழைய கடனை பைசல் செய்ய வங்கிக் கடன் உதவி கிடைக்கும்.

14.4.2020 முதல் 7.7.2020 வரை குரு பகவான் உங்களின் ராசிக்கு 6-ம் வீடான மகர ராசியில் அதிசாரமாகி அமர்வதால் எதிரிகளிடம் குறிப்பறிந்து கவனமாகச் செயல்படுங்கள். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் வீண் வாக்கு வாதங்களில் ஈடுபட வேண்டாம்.

8.7.2020 முதல் 12.11.2020 வரை குரு பகவான் 5-ம் வீட்டில் நிற்பதால் கல்வியாளர்கள், அறிஞர்களின் நட்பால் சில விஷயங்களை சாதித்துக் காட்டுவீர்கள். மகனின் அலட்சியப்போக்கு மாறும். மகளின் திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள். தூரத்து சொந்தங்கள் தேடி வந்து பேசுவார்கள். குலதெய்வக் கோயிலைப் புதுப்பிக்க உதவுவீர்கள். பூர்வீகச் சொத்துகளைச் சீர்செய்வீர்கள். வாகன வசதி பெருகும். செலவுகளைக் குறைக்கத் திட்டமிடுவீர்கள்.

13.11.2020 முதல் ஆண்டு முடியும் வரை குரு 6-ம் வீட்டில் மறைவதால் வரவுக்கு மிஞ்சிய செலவுகளும் அலைச்சலும் எதிர்ப்புகளும் வந்து நீங்கும். கணவன் மனைவிக்குள் பரஸ்பரம் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது.

1.9.2020 முதல் ராகு உங்களின் ராசிக்கு 10-ம் வீட்டுக்குச் செல்வதால் உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். பதவி உயரும். சம்பளம் கூடும். நான்காம் வீட்டுக்கு கேது வருவதால் முன்கோபம், எதிலும் ஒரு சலிப்பு வந்து நீங்கும். பல காரியங்களில் இரண்டு மூன்று முறை முயன்று முடிக்க வேண்டி வரும். தாயாரின் உடல்நலனில் கவனம் செலுத்துங்கள்.

சித்திரை, வைகாசி, ஆவணி, ஐப்பசி, தை மாதங்களில் பணப்புழக்கம் அதிகரிக்கும். நவீன ரக எலெக்ட்ரானிக்ஸ், சமையலறைச் சாதனங்கள் வாங்குவீர்கள். வெகுகாலமாக சொந்த வீடு வாங்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு இப்போது அந்த ஆசை நிறைவேறும். சிலர் வீட்டில் கூடுதலாக ஓர் அறை கட்டுவார்கள். நேரம் கிடைக்கும்போதெல்லாம் தியானம், யோகா செய்யுங்கள்.

18.6.2020 முதல் 12.8.2020 வரை மற்றும் 26.10.2020 முதல் 9.12.2020 வரை செவ்வாய் 8-ம் வீட்டில் நிற்பதால் வீடு, மனை வாங்கும் முன் தாய்ப் பத்திரத்தைச் சரிபார்த்து வாங்குவது நல்லது. தாய்வழியில் மதிப்பு, மரியாதை கூடும்.

29.1.2021 முதல் 22.2.2021 வரை உள்ள கால கட்டத்தில் சுக்கிரன் 6-ம் வீட்டில் மறைவதால் கணவன் மனைவிக்குள் வீண் வாக்கு வாதங்களைத் தவிர்ப்பதும் பரஸ்பரம் விட்டுக்கொடுத்துப் போவதும் நல்லது.

வியாபாரத்தில் ஏற்ற இறக்கங்கள் இருக்கத்தான் செய்யும் என்றாலும் இலக்கை எட்டிப் பிடிப்பீர்கள். பாக்கிகள் வசூலாகும். புது போட்டியாளர்கள் வருவார்கள். பழைய சரக்குகளை நல்ல லாபத்துக்கு விற்று புதிதாக கொள்முதல் செய்வீர்கள். வாடிக்கையாளர்களிடமும் பங்குதாரர்களிடமும் கனிவாகப் பேசுங்கள். வைகாசி, தை மாதங்களில் திடீர் லாபம் கிடைக்கும். தள்ளிப்போன ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். கம்ப்யூட்டர், ரியல் எஸ்டேட் துறை, ஏற்றுமதி இறக்குமதி துறைகள் நல்ல லாபம் தரும்.

இந்த ஆண்டு பிறக்கும்போது குரு பகவான் 6-ம் வீட்டில் அமர்வதால் உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உங்களுக்கு விருப்பமில்லாத இடத்துக்கு மாற்றப்படுவீர்கள். கணினித் துறையினர் புதிய வாய்ப்புகளை யோசித்து ஏற்பது நல்லது.

கலைஞர்களுக்குச் சம்பள பாக்கி கைக்கு வரும். மூத்த கலைஞர்களை மதிக்கத் தவறாதீர்கள். சின்னச் சின்ன வாய்ப்புகள் வந்தாலும் தவற விடாதீர்கள்.

பெண்களுக்கு ஆண்டின் மையப்பகுதியில் நல்ல வரன் அமையும். தடைபட்ட கல்வியைத் தொடருவீர்கள்.

மாணவர்கள் அலட்சியமாக இருக்கக் கூடாத ஆண்டு இது. தெரியாதவற்றை ஆசிரியரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். விடைகளை எழுதிப் பாருங்கள். உயர்கல்வியில் வெற்றியுண்டு. நல்ல நிறுவனத்தில் எதிர்பார்த்த கல்விப்பிரிவில் சேருவீர்கள்.

இந்தத் தமிழ்ப் புத்தாண்டு திடீர் வளர்ச்சியை யும் பிள்ளைகளால் நிம்மதியையும் தருவதாக அமையும்.

பரிகாரம்

காஞ்சிபுரத்துக்கு அருகிலுள்ள தக்கோலம் எனும் ஊரில் வீற்றிருக்கும் சிவபெருமானையும் ஸ்ரீதட்சணாமூர்த்தியையும் நெய் விளக்கேற்றி வணங்குங்கள். ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு உதவுங்கள். நிம்மதி கிடைக்கும்.

கன்னி தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்கள்

விழுவதெல்லாம் எழுவதற்கே என்று நம்பிக்கையுடன் போராடி முதலிடத்தைப் பிடிப்பவர்கள் நீங்கள். உங்களின் ராசிக்கு 4-வது ராசியான தனுசு ராசியில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் பிரபலங்களின் பட்டியலில் இடம்பிடிப்பீர்கள். பணப் பற்றாக்குறை நீங்கும். கணவன் மனைவிக்குள் இணக்கமான சூழ்நிலை உண்டாகும். சுப காரியங்கள் இனிதே நடக்கும்.

14.4.2020 முதல் 25.12.2020 வரை சனி பகவான் 4-ம் வீட்டில் அர்த்தாஷ்டம சனியாக அமர்வதால் தாயாரின் உடல்நலனில் கவனம் செலுத்துவது நல்லது. தாய்வழி உறவினர்களுடன் வீண் வாக்குவாதம் செய்ய வேண்டாம். யாரையும் எளிதில் நம்பிப் பழக வேண்டாம்.

26.12.2020 முதல் சனி 5-ம் வீட்டில் நுழைவதால் பிள்ளைகளின் வருங்காலம் குறித்த கவலைகள் வரக்கூடும். மகளின் திருமணத்துக்காக கடன் வாங்க வேண்டி வரும். பூர்வீகச் சொத்தில் புதிய முதலீடுகள் வேண்டாம். சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி, பங்குனி மாதங்களில் கொடுத்த பணம் திரும்பி வரும். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். சொந்தம் பந்தங்கள் வியக்கும்படி திருமணத்தைக் கோலா கலமாக நடத்துவீர்கள். மகனை உயர்கல்விக்காக வெளிநாடு அனுப்பி வைப்பீர்கள். சகோதர சகோதரிகளிடம் இருந்த பிரச்னைகளெல்லாம் நீங்கும்.

14.4.2020 முதல் 7.7.2020 வரை குரு பகவான் உங்களின் ராசிக்கு 5-ம் வீடான மகர ராசியில் அதிசாரமாகி அமர்வதால் மன இறுக்கங்கள் குறையும். குடும்பத்திலும் அமைதி உண்டாகும். குழந்தை பாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். திருமணம் தள்ளிப்போனவர்களுக்குக் கூடி வரும். பிள்ளைகளின் பிடிவாத குணம் தளரும்.

8.7.2020 முதல் 12.11.2020 வரை குரு பகவான் ராசிக்கு 4-ம் வீட்டில் தொடர்வதால் வேலைச்சுமை அதிகரிக்கும். உணர்ச்சிவசப்படாமல் முடிவெடுக்கப்பாருங்கள். தாய்வழிச் சொத்துப் பிரச்னையை சுமுகமாகப் பேசித் தீர்ப்பது நல்லது.

13.11.2020 முதல் ஆண்டு முடியும் வரை 5-ம் வீட்டுக்கு குரு பகவான் செல்வதால், எதிர்பார்ப்புகள் யாவும் தடையின்றி முடியும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். குழந்தை பாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். பிள்ளைகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவீர்கள். மகன், மகளுக்கு உயர்கல்வி, உத்தியோகம் எதிர்பார்த்த நல்ல நிறுவனத்தில் அமையும்.

1.9.2020 முதல் ராகு உங்களின் ராசிக்கு 9-ம் வீட்டுக்குச் செல்வதால் தந்தையுடன் சின்னச்சின்ன கருத்து வேறுபாடுகள் வரும். சொத்து விவகாரங்களில் கவனம் தேவை. முக்கிய ஆவணங்களில் கவனம் தேவை. கேது ராசிக்கு மூன்றாம் வீட்டுக்கு வருவதால் தாயாரின் உடல்நிலை சீராகும். புது வாகனம் வாங்குவீர்கள். கணவன் மனைவிக்குள் தாம்பத்யம் இனிக்கும். பழைய கடனைக் கொடுத்து முடிப்பீர்கள். ஆபரணங்கள் வாங்குவீர்கள். பழுதான மின்னணு, மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள். உங்களை எதிரியாக நினைத்த பலர், இனி உங்களின் நல்ல மனத்தைப் புரிந்துகொண்டு நட்பு பாராட்டுவார்கள். குலதெய்வக் கோயிலைச் சொந்த செலவில் புதுப்பிப்பீர்கள்.

12.8.2020 முதல் 26.10.2020 வரை மற்றும் 9.12.2020 முதல் 18.2.2021 வரை செவ்வாய் 8-ம் வீட்டில் மறைவதால் சகோதரியின் திருமணத்தைப் போராடி முடிப்பீர்கள். பூர்வீகச் சொத்துப் பிரச்னையை முடிந்தவரை பேசித் தீர்ப்பது நல்லது. பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளுங்கள்.

22.2.2021 முதல் 18.3.2021 வரை சுக்கிரன் 6-ம் வீட்டில் மறைவதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்துவைக்க முடியாதபடி செலவுகள் இருக்கும். வாகனத்தை அதிவேகமாக இயக்க வேண்டாம். வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது.

வியாபாரத்தில் லாபத்தைப் பெருக்க நவீன யுக்திகளைக் கையாளுவீர்கள். புதிய சலுகைகளை அறிமுகப்படுத்துவீர்கள். வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிக்கும். சித்திரை, வைகாசி, ஆனி மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கிடைக்கும். தொழில் சம்பந்தமாக அயல்நாடு சென்று சில முக்கியஸ்தர்களைச் சந்திப்பீர்கள். பழைய சரக்குகள் விற்றுத் தீரும். திடீர் லாபம் உண்டு. இரும்பு, கெமிக்கல், கமிஷன் வகைகளால் ஆதாயம் அடைவீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் உயரதிகாரி களின் எண்ணத்தைப் புரிந்துகொள்வார்கள் வெகுநாள்களாக எதிர்பார்த்தும் கிடைக்காமல் போன பதவி உயர்வு ஆண்டின் முற்பகுதியில் கிடைக்கும். வைகாசி, ஆனி மாதங்களில் புதிய பொறுப்புகள் வரும். சக ஊழியர்களை உங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவீர்கள். அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களிலிருந்து அழைப்புகள் வரும். கார்த்திகை, மார்கழி, பங்குனி மாதங்களில் அதிக சம்பளத்துடன் கூடிய நல்ல வேலைவாய்ப்பு வீடு தேடி வரும்.

கலைஞர்களுக்குப் பரிசும் பாராட்டும் கிடைக்கும். பெரிய நிறுவனங்கள் உங்களை அழைத்துப் பேசும். மூத்த கலைஞர்கள் நட்புறவாடுவார்கள். பெண்கள் எதிலும் கவனமாக இருப்பது நல்லது. திருமணத் தடைகள் விலகும். பெற்றோரின் ஒத்துழைப்பு உண்டு. தாய்வழி உறவினர்களுடன் இருந்த கருத்து மோதல்கள் விலகும். மாணவர்கள் விடைகளை அடிக்கடி எழுதிப் பார்ப்பது நல்லது. சமயோஜித புத்தியைப் பயன்படுத்துங்கள். ஆசிரியர்களின் ஆதரவு கிடைக்கும். உயர்கல்வியில் நல்ல மதிப்பெண் பெறுவீர்கள்.

இந்தத் தமிழ்ப் புத்தாண்டு எதிர்பாராத திருப்பங்களையும், சமூகத்தில் பெரிய அந்தஸ்தையும் அமைத்துத் தருவதாக இருக்கும்.

பரிகாரம்

ஞாயிற்றுக்கிழமைகளில் அருகிலிருக்கும் ஐயப்பன் கோயிலுக்கு சென்று நெய் தீபமேற்றி வணங்குங்கள். மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுங்கள். வெற்றி நிச்சயம்.

துலாம்தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்கள்

ற்றுமை உணர்வு அதிகமுள்ள நீங்கள், மற்றவர்களின் சொத்துக்கு ஆசைப்பட மாட்டீர்கள். அதிகாரம், ஆணவத்தைவிட அன்புக்குக் கட்டுப்படுவீர்கள். உங்களின் ராசிக்கு 3-வது ராசியான தனுசில் சார்வரி ஆண்டு பிறப்பதால் முடியாததை முடித்துக்காட்டுவீர்கள்.

பாதியிலேயே நின்றுபோன காரியங்கள் உடனே நிறைவேறும். தைரியம் பிறக்கும். எதிர்பாராத பணவரவு உண்டு. சாதாரண நிலையிலிருந்து வாழ்க்கையின் அடுத்தகட்டத்துக்கு முன்னேறுவீர்கள். பேச்சிலிருந்த முணுமுணுப்பு, சலிப்பு நீங்கும். தன்னம்பிக்கையுடன் பேசுவீர்கள். உங்களின் நிர்வாகத்திறமை அதிகரிக்கும். பெரிய முடிவுகள் எடுப்பீர்கள். பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேருவீர்கள். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். குழந்தை இல்லாத தம்பதியருக்கு வாரிசு உண்டாகும்.

இந்த ஆண்டு தொடக்கம் முதல் 25.12.2020 வரை சனி 3-ம் வீட்டில் நிற்பதால் பெரிய திட்டங்கள் நிறைவேறும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். தூரத்து சொந்தங்கள் தேடி வருவார்கள். 26.12.2020 முதல் வருடம் முடியும் வரை சனி 4-ம் வீட்டில் அமர்வதால் தாயாரின் உடல்நலனில் கவனம் தேவை. ஒரு சொத்தைக் காப்பாற்ற மற்றொரு சொத்தை விற்க வேண்டி வரும். யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். புண்ணிய தலங்களுக்கு யாத்திரை செல்வீர்கள். மகான்களின் வழிபாடு உங்களுக்கு பலனளிக்கும். குடும்ப ஒற்றுமை மேலோங்கும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனம் கொள்ளுங்கள். உறவுகளால் பலனுண்டு.

14.4.2020 முதல் 7.7.2020 வரை குரு பகவான் உங்களின் ராசிக்கு 4-ம் வீடான மகர ராசியில் அதிசாரமாகி அமர்வதால், தாய்வழி உறவினர்களால் அலைச்சலும் செலவுகளும் இருக்கும்.

8.7.2020 முதல் 12.11.2020 வரை குரு பகவான் 3-ம் வீட்டில் மறைந்திருப்பதால் சில காரியங்களை இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்கவேண்டி வரும். உங்களின் இயல்புக்கு மாறான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம். சில நேரங்களில் உணர்ச்சிவசப்பட்டு சிலரைக் கடிந்துகொள்வீர்கள். தியானம் யோகா செய்வது நல்லது.

13.11.2020 முதல் வருடம் முடியும் வரை குரு உங்களின் ராசிக்கு 4-ம் வீட்டில் அமர்வதால் வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வீடுகட்டும் பணி தாமதமாகும். தாய்வழிச் சொத்தைப் போராடிப் பெறவேண்டி வரும்.

ஆடி, ஆவணி, புரட்டாசி, கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் உங்களின் மகளுக்கு எதிர்பார்த்தபடி நல்ல வரன் அமையும். வேலைக்கு விண்ணப்பித்துக் காத்துக்கொண்டிருந்த உங்களின் மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். சொத்துப் பிரச்னைகள் ஆண்டின் மத்திய பகுதியில் தீரும். பிரபலங்களின் நட்பு கிடைப்பதுடன் அவர்களால் சில காரியங்கள் நல்லவிதமாக முடியும்.

1.09.2020 முதல் கேது ராசிக்கு 2-ம் வீட்டுக்கு வருவதால் யாரையும் விமர்சித்துப் பேச வேண்டாம். குடும்பத்தில் வீண் வாக்குவாதங்கள் வந்து போகும். 8-ம் வீட்டுக்கு ராகு வருவதால் திடீர்ப் பயணங்கள் அதிகமாகும். சேமிப்புகள் கரையும். தந்தையாரின் உடல்நிலையில் இருந்த பாதிப்புகள் நீங்கும்.

18.03.2021 முதல் 11.04.2021 வரை சுக்கிரன் 6-ம் வீட்டில் மறைவதால் வாழ்க்கைத்துணைக்கு மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். மின் சாதனங்களை கவனமாகக் கையாளுங்கள்.

18.2.2021 முதல் 13.4.2021 வரை செவ்வாய் 8-ம் வீட்டில் மறைவதால் சகோதரர்களால் நிம்மதியிழப்பீர்கள். வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். உங்கள் சக்தி மீறி எந்த உறுதிமொழியும், யாருக்கும் தர வேண்டாம். கூடுதல் செலவுகளால் திணறுவீர்கள். பணம் எடுத்துச் செல்லும்போது கவனத்தைச் சிதற விடாதீர்கள்.

வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். சித்திரை, வைகாசி மாதங்களில் பெரிய நிறுவனங்களின் தொடர்பு கிடைக்கும். ஆடி, ஆவணி மாதங்களில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயரும். வேலையாட்களிடம் கறாராக இருங்கள். மாசி மாதத்தில் கடையை விரிவுபடுத்துவீர்கள். ஏற்றுமதி இறக்குமதி, உணவு, கெமிக்கல், பிளாஸ்டிக் வகைகளால் ஆதாயம் பெருகும். மற்றவர்கள் விஷயத்தில் அநாவசியமாகத் தலையிடுவதைத் தவிர்க்கப் பாருங்கள். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் தொந்தரவு கொடுத்தாலும், நிதானத்தைத் தவறவிடாதீர்கள்.

உத்தியோகத்திலிருந்து வந்த நெருக்கடிகள் நீங்கும். சக ஊழியர்களின் சம்பள உயர்வுக்காகப் போராடுவீர்கள். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். ஆவணி, மாசி மாதங்களில் வெளிநாட்டுத் தொடர்புடைய சில நிறுவனங்களிருந்து புது வாய்ப்புகள் தேடி வரும்.

கலைஞர்கள் வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக்கொள்வீர்கள். மூத்த கலைஞர்களைப் பகைத்துக் கொள்ள வேண்டாம். சம்பளம் உயரும்.

பெண்களுக்குத் தள்ளிப்போய்க் கொண்டிருந்த கல்யாணம் சிறப்பாக முடியும். விலையுயர்ந்த ஆடை, ஆபரணம் சேரும். மாதவிடாய்க் கோளாறு, வயிற்றுவலி நீங்கும். பெற்றோரின் பாசமழையில் நனைவீர்கள்.

மாணவர்கள் விளையாட்டைக் குறைத்து படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. நல்ல நண்பர்கள் அறிமுகமாவார்கள். வகுப்பறையில் வீண் அரட்டை வேண்டாம். உங்களின் திறமையை பலரும் பாராட்டுவார்கள்.

இந்த சார்வரி புத்தாண்டு ஏற்றத்தாழ்வு களையும் செலவுகளையும் கொடுத்தாலும் உங்களின் வளர்ச்சிப் பணிகளைத் தொய்வில்லா மல் தொடர ஏதுவாக அமையும்.

பரிகாரம்

திருநெல்வேலி மாவட்டம், கீழப்பாவூர் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஶ்ரீநரசிம்மரை, சனிக்கிழமைகளில் சென்று தீபமேற்றி வணங்குங்கள். சுமை சுமக்கும் தொழிலாளிகளுக்கு உதவுங்கள். வாழ்வில் வளம் பெருகும்.

விருச்சிகம் தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்கள்

தொடங்கிய வேலையை முடிக்கும் வரை அதே சிந்தனையுடன் இருப்பவர் நீங்கள். உங்களின் ராசிக்கு 2-ம் வீடான தனஸ்தானத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் சோர்ந்து போய் முடங்கியிருந்த உங்கள் மனத்தில் தன்னம்பிக்கை பிறக்கும். புதிய திட்டங்கள் நிறைவேறும்.

புதியவர்கள் அறிமுகமாவார்கள். வி.ஐ.பி நட்பைச் சரியாகப் பயன்படுத்தி பல வேலைகளை முடிப்பீர்கள். மற்றவர்களை நம்பி செயல்பட்டது போதும் என்று, நீங்களே இனி களத்தில் நேரடியாகக் குதிப்பீர்கள். கற்பனையில் மூழ்காமல் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவீர்கள். இழுபறியாக இருந்த அரசு காரியம் நல்லவிதமாக முடியும்.

வெளிநாடு, வெளிமாநிலங்கள் சென்று வருவீர்கள். கணவன் மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் நடக்கும்; உங்களின் வாழ்க்கையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்லும் வழியைக் காண்பீர்கள். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். மகனுக்கு வேலை கிடைக்கும். உடன்பிறந்தவர்களிடையே இருந்து வந்த கருத்துவேறுபாடுகள் மறையும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வசதி, வாய்ப்புகள் நிறைய இருந்தும் வாரிசுகள் இல்லாமல் தவித்தவர்களுக்கு வாரிசு உண்டாகும்.

சனி பகவான் 14.4.2020 முதல் 25.12.2020 வரை பாத சனியாக 2-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் பேச்சில் நிதானம் அவசியம். பணம் கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் கறாராக இருங்கள். யாருக்கும் வாக்குறுதி தர வேண்டாம். 26.12.2020 முதல் சனி பகவான் 3-ம் வீட்டில் நுழைவதால் புது சொத்து வாங்குவீர்கள். வழக்கில் வெற்றிபெறுவீர்கள். கல்வியாளர்கள், அரசியல் பிரமுகர்கள் உதவுவார்கள்.

மூத்த சகோதர, சகோதரிகளால் ஆதாயமுண்டு. பூர்வீகச் சொத்துக் கான வரியைச் செலுத்தி சரியாகப் பராமரியுங்கள். நேர்த்திக்கடனை நிறைவேற்றுவீர்கள்.

14.4.2020 முதல் 7.7.2020 வரை குரு பகவான் உங்களின் ராசிக்கு 3-ம் வீடான மகர ராசியில் அதிசாரமாகி அமர்வதால் கவலைகள் வந்து போகும். இளைய சகோதரர் வகையில் மனத்தாங்கல் வரும். நட்பு வட்டத்தில் கவனமாகப் பழகுவது நல்லது.

8.7.2020 முதல் 12.11.2020 வரை குரு பகவான் 2-ம் வீட்டில் தொடர்வதால் குடும்பத்தில் அமைதி நிலவும். விலையுயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். வழக்குகள் சாதகமாக முடியும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். பழைய கடனில் ஒரு பகுதியைத் தந்து முடிப்பீர்கள்.

13.11.2020 முதல் ஆண்டு முடியும் வரை 3-ம் வீட்டுக்கு குரு பகவான் செல்வதால் காரியத் தடைகள் அதிகரிக்கலாம். முதல் முயற்சியிலேயே எந்த ஒரு வேலையையும் முடிக்க முடியாமல் இரண்டாவது அல்லது மூன்றாவது முயற்சியில் போராடி முடிக்க வேண்டி வரும்.

இளைய சகோதரர் ஆதரவாக இருப்பார். பழைய நண்பர்களில் ஒரு சிலர் விலகுவார்கள். பணத்தட்டுப்பாடு அதிகரிக்கும். தவிர்க்க முடியாத செலவினங்களும் ஏற்படும். தந்தை வழி உறவினர்களால் உதவிகள் உண்டு.

சித்திரை, வைகாசி, ஆவணி, புரட்டாசி, தை, மாசி மாதங்களில் திடீர்ப் பணவரவு உண்டு. சுப நிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும். வேற்று மொழி பேசுபவர்களால் திருப்பங்கள் ஏற்படும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கப் பாருங்கள். எல்லா வசதிகளும் நிறைந்த வீட்டுக்குக் குடிபுகுவீர்கள்.

1.9.2020 முதல் ஆண்டு முடியும் வரை உங்களின் ராசியில் கேது நிற்பதால் எதிலும் ஒருவித சலிப்பு வந்து நீங்கும். இரும்பு, சுண்ணாம்புச் சத்துள்ள காய்கனிகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

1.9.2020 முதல் 7-ம் வீட்டில் ராகுவும் நுழைவதால் கணவன் மனைவி வீண் வாக்கு வாதங்களில் ஈடுபட வேண்டாம். தேவையற்ற மன உளைச்சல்கள், காரியத் தடைகள் ஏற்படலாம்.

வியாபாரத்தில் வைகாசி, ஆவணி மாதங்களில் புது முதலீடுகள் செய்வீர்கள். விளம்பர யுக்திகளைக் கையாண்டு லாபத்தைப் பெருக்குவீர்கள்.

மறைமுக போட்டிகளை வெல்வீர்கள். அனுபவம் மிகுந்த வேலையாட்களைப் பணியில் அமர்த்துவீர்கள். யாருக்கும் முன்பணம் அதிகம் தர வேண்டாம். புது ஒப்பந்தங்கள் தேடி வரும். வருட மத்திய பகுதியில் கடையை விரிவுபடுத்துவீர்கள். சொந்த இடத்துக்கு மாற்றுவீர்கள். தை, மாசி மாதங்களில் திடீர் லாபம் உண்டு. புது பங்கு தாரர்களைச் சேர்ப்பீர்கள்.

உத்தியோகத்தில் உங்களை எதிரியைப் போல பார்த்தவர்கள் வேறிடத்துக்கு மாற்றப்படுவார்கள். உங்களின் கை ஓங்கும். வழக்கில் வெற்றியடை வீர்கள். இழந்த பதவியில் மீண்டும் அமர்வீர்கள். வெகுநாள்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு சித்திரை, வைகாசியிலேயே கிடைக்க வாய்ப்புண்டு. சக ஊழியர்களைத் திருத்துவீர்கள். இயக்கம், சங்கம் சார்பாக பெரிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.

கலைத்துறையினரை உதாசினப்படுத்திய நிறுவனமே அழைத்துப் பேசும். பாக்கி பணம் கைக்கு வரும்.

பெண்களுக்கு நல்ல விதத்தில் திருமணம் முடியும். வைகாசி, ஆவணி, தை மாதங்களில் நினைத்ததைச் சாதிப்பீர்கள். பெற்றோரின் ஆலோசனையை ஏற்பது நல்லது. எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலையும் கிடைக்கும்.

மாணவ, மாணவிகள் கல்வியில் அதிகம் கவனம் செலுத்துவது நல்லது. தேர்வு நேரத்தில் படித்துக்கொள்ளலாம் என்று தப்புக் கணக்கு போடாதீர்கள். கணிதம், அறிவியல் பாடங்களில் அதிக கவனம் செலுத்துங்கள். மதிப்பெண் கூடும்.

இந்த சார்வரி ஆண்டு, முடங்கிக்கிடந்த உங்களை முதலிடத்துக்கு அழைத்துச் செல்வதுடன் வசதி வாய்ப்புகளையும் அள்ளித்தருவதாக அமையும்.

பரிகாரம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் வீற்றிருக்கும் ஶ்ரீயோக பைரவரை அஷ்டமி திதி நாளில் தீபமேற்றி வணங்குங்கள். செங்கல் சூளை, கல்குவாரியில் வேலை செய்யும் கூலித்தொழிலாளிக்கு உதவுங்கள். ஆரோக்கியம் மேம்படும்.

தனுசு தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்கள்

முன்வைத்த காலை பின் வைக்காமல் முடித்துக்காட்டுவதில் வல்லவர்கள் நீங்கள். உங்களின் ராசியிலேயே இந்த சார்வரி ஆண்டு பிறப்பதால், வேலைச்சுமை அதிகரிக்கும். முக்கிய வேலைகளை மற்றவர்களை நம்பி ஒப்படைக்க வேண்டாம். குடும்பத்தில் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். தடைப்பட்ட காரியங்களை விரைந்து முடிப்பீர்கள்.

கல்யாணம், புதுமனைப் புகுவிழா, சீமந்தம் என வீடு களைகட்டும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். கணவன் மனைவி அந்நியோன்யம் அதிகரிக்கும். வட்டிக்கு வாங்கிய கடனை அசலுடன் கட்டி முடிக்கும் அளவு வருமானம் உயரும். பேச்சில் முதிர்ச்சி தெரியும்.

பூர்வீகச் சொத்தை விற்று புதிதாகச் சொத்து வாங்குவீர்கள். பிள்ளைகளிடம் இருந்துவந்த கோபங்கள் நீங்கும். அவர்களைக் கலை மற்றும் விளையாட்டுத் துறையில் ஈடுபடுத்துவீர்கள். தள்ளிப்போன சகோதரியின் திருமணம் முடியும்.

சனி பகவான் 14.4.2020 முதல் 25.12.2020 வரை ஜன்ம சனியாக இருப்பதால் சலிப்பு, சோர்வு, ஏமாற்றம் வந்து நீங்கும். 26.12.2020 முதல் வருடம் முடியும்வரை பாத சனியாகத் தொடர்வதால் திடீர்ப் பயணங்களும், செலவுகளும் அதிகரிக்கும். பயணங்களில் கவனமாக இருப்பது நல்லது. பொங்கு சனி நடைபெறுபவர்களுக்கு வீடு, மனை வாங்கும் யோகமும், வாகனம் வாங்கும் யோகமும் உண்டாகும்.

14.4.2020 முதல் 7.7.2020 வரை குரு பகவான் உங்களின் ராசிக்கு 2-ம் வீடான மகர ராசியில் அதிசாரமாகி அமர்வதால், திடீர் யோகம், பணவரவு உண்டாகும். குடும்பத்தில் நிலவி வந்த கூச்சல், குழப்பங்கள் விலகும். ஆரோக்கியம் சீராகும். உயர் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும்.

8.7.2020 முதல் 12.11.2020 வரை உங்களின் ராசியிலேயே குரு அமர்ந்து ஜன்ம குருவாக இருப்பதால் பழைய பிரச்னைகள் தலைதூக்கும். மற்றவர்களை நம்பி பெரிய முயற்சிகளில் ஈடுபடாதீர்கள்.

13.11.2020 முதல் வருடம் முடியும் வரை குரு பகவான் உங்களின் ராசியை விட்டு விலகி 2-ம் வீடான மகர ராசியில் அமர்வதால் குடும்பத்தில் நிலவிவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். மருந்து மாத்திரைகளிலிருந்து விடுதலை கிடைக்கும். உடல்நலம் சீராகும். படித்து, பட்டம் வாங்கியும் கல்வித் தகுதிக்கேற்ப நல்ல வேலையில்லாமல் இருந்தவர்களுக்கு நல்ல வேலை அமையும்.

தினந்தோறும் எதிர்பார்த்துக் காத்திருந்த தொகை கைக்கு வரும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். அநாவசியச் செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள். பழைய வாகனத்தை மாற்றுவீர்கள். குழந்தை பாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். மகனுக்கு உயர்கல்வி, உத்தியோகம் நல்லவிதத்தில் அமையும். ஆவணி, புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் பரபரப்புடன் காணப்படுவீர்கள். வருங்கால நலனைக் கருத்தில்கொண்டு முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.

1.9.2020 முதல் கேது உங்களின் ராசியை விட்டு விலகுவதால் முன்கோபம் நீங்கும். எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். விலகிச்சென்ற நண்பர்கள், உறவினர்கள் விரும்பி வந்து பேசுவார்கள். கேது 12-ம் வீட்டில் நுழைவதால் ஆடம்பரச் செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள்.

1.9.2020 முதல் 6-ம் வீட்டுக்கு ராகு வருவதால் வெளிநாட்டில் இருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. பிரிந்திருந்த தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். அரசாங்க விஷயங்கள் உடனே முடியும். வழக்குகள் சாதகமாகும்.

14.4.2020 முதல் 3.5.2020 வரை மற்றும் 4.6.2020 முதல் 30.7.2020 வரை சுக்கிரன் 6-ம் வீட்டில் மறைவதால் மற்றவர்களிடம் பேசும்போது கவனமாகப் பேசுங்கள். அடுத்தவர்களின் விஷயங்களில் நீங்கள் தலையிடாமல் இருப்பது நல்லது. நீங்கள் நியாயமாகவும் யதார்த்தமாகவும் பேசினாலும் சிலர் ஒரு சார்பாகப் பேசுவதாகக் குறை கூறுவார்கள்.

வியாபாரத்தில் ஆவணி, புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் இரட்டிப்பு லாபம் உண்டு. நல்ல வேலையாட்களைப் பணியில் அமர்த்துவீர்கள். சிறிய இடத்தில் அவஸ்தைப்பட்டவர்கள் பெரிய இடமாகவும் மக்கள் கூடும் முக்கிய இடமாகவும் புதிய கடையை அமைப்பார்கள். ஏற்றுமதி இறக்குமதி, உணவு, பெட்ரோ கெமிக்கல் வகைகளால் பெரும் பணம் சம்பாதிப்பீர்கள். பங்குதாரர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். மாசி, பங்குனி மாதங்களில் பிரச்னை தந்தவரை நீக்கிவிட்டு புதிய பங்குதாரர்களைச் சேர்ப்பீர்கள்.

உத்தியோகத்தில் நிலுவைத்தொகை கைக்கு வரும். வைகாசி மாதத்தில் புதிய வேலை அமையும். ஆவணி, புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் சாதகமான சூழ்நிலை உருவாகும். மூத்த அதிகாரி உதவுவார். உங்களின் நெடுநாள் கனவாக இருந்த பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கும். சக ஊழியர்களின் ஆதரவு கூடும். வேலையைத் தேக்கிவைக்காமல் அவ்வப்போது முடிப்பது நல்லது. மாசி, பங்குனி மாதங்களில் வேறு சில நல்ல வாய்ப்புகளும் தேடி வரும்.

கலைத்துறையினரின் கனவுகள் நனவாகும். அவர்களின் படைப்புகள் பாராட்டப்படும். அரசாங்க கௌரவம் கிடைக்கும்.

பெண்களுக்குக் கண்ணுக்கு அழகான கணவர் அமைவார். உடல்நலனில் கவனம் செலுத்துங்கள். பெற்றோர் உங்களைப் புரிந்துகொள்வார்கள். ஒரு சிலர் பாதியிலே நின்றுபோன படிப்பைத் தொடருவார்கள்.

மாணவ மாணவியர் அரட்டைப் பேச்சைத் தவிர்ப்பது நல்லது. சந்தேகங்களைக் கேட்பதில் தயக்கம் வேண்டாம். கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகளில் பரிசும் பாராட்டும் பெறுவீர்கள்.

இந்தப் புத்தாண்டு கட்டுக்கடங்காத செலவு களையும், கடின வேலைகளையும் தருவதாக இருக்கும். எனினும் நிறைவில் மகிழ்ச்சியையும் வெற்றியையும் பெற்றுத் தருவதாக அமையும்.

பரிகாரம்

நாமக்கல் ஶ்ரீஆஞ்சநேயரை, மூலம் நட்சத்திர நாளில் அல்லது சனிக்கிழமைகளில் வெற்றிலை மாலை அணிவித்து வணங்குங்கள். பேச இயலாதவர்களுக்கு உதவுங்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும்.

மகரம் தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்கள்

லகம் ஆயிரம் சொன்னாலும் உள்மனம் சொல்வதற்கே முக்கியத்துவம் தருபவர் நீங்கள். இந்தப் புத்தாண்டு உங்களின் ராசிக்கு விரய ஸ்தானமான 12-ம் வீட்டில் பிறப்பதால் திடீர்ப் பயணங்கள் அதிகரிக்கும். வீண் கௌரவத்துக்காக சேமிப்புகளைக் கரைத்துக்கொண்டிருக்காமல் அத்தியாவசிய செலவுகளை மட்டும் செய்யுங்கள்.

நீண்ட நாள்களாகச் செல்லவேண்டுமென நினைத்திருந்த கோயில்களுக்குச் சென்று வருவீர்கள். நல்ல வாய்ப்புகள் கிடைத்தால் உடனே பயன்படுத்திக் கொள்ளுங்கள். மனம் மகிழும் நல்ல செய்திகள் வந்து சேரும். வாழ்க்கைத் துணை வழியில் நல்ல ஆதரவு கிடைக்கும். நட்பு வட்டம் விரிவாகும். நண்பர்களால் நன்மை கிட்டும்.

ஆனி, ஐப்பசி, கார்த்திகை, மாசி, பங்குனி மாதங்களில் சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். வீடு, மனை வாங்குவது, விற்பதில் இருந்துவந்த இழுபறி நிலை மாறும். பூர்வீகச் சொத்தில் இருந்த வில்லங்கம் விலகும். வரவே வராது என்றிருந்த பணம் கைக்கு வந்து சேரும். பிள்ளைகளின் திருமணத்தைச் சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள்.

வருடத்தின் ஆரம்பம் முதல் 25.12.2020 வரை விரய சனி நடைபெறுவதால் கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப்போவது நல்லது. இந்த நேரத்தில் சேமிக்க முடியாதபடி செலவுகள் உண்டாகும்.

26.12.2020 முதல் வருடம் முடியும் வரை ஜன்ம சனி தொடர்வதால் உடல் நலனில் அக்கறை செலுத்துங்கள். தியானம், யோகா மேற்கொள்ளுங்கள். கொழுப்புச் சத்துள்ள உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. முடிந்தால் கூழ், கஞ்சி போன்ற பாரம்பர்ய உணவுகளை உட்கொள்ளுங்கள்.

இந்த ஆண்டு முழுவதும் குரு பகவான் உங்களின் ராசிக்குச் சரியில்லாத இடத்தில் இருப்பதால் பணிச்சுமை இருந்து கொண்டேயிருக்கும். பணிக்கு ஏற்ற பலனும் கிட்டும்.

சட்டத்துக்குப் புறம்பான வகையில் செயல்படுபவர்களுடன் எந்த நட்பும் வேண்டாம். வீண்அலைச்சல், அலைக்கழிப்பு உண்டாகும். உறக்கம் கெடும். முன்கோபம் அதிகரிக்கும். உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளை விட வேண்டாம். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். நேரம் கடந்து சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது.

கணவன் மனைவிக்குள் வீண் வாக்குவாதங் களைத் தவிர்ப்பதும் நல்லது. எந்தப் பிரச்னையாக இருந்தாலும் இருவரும் மனம்விட்டுப் பேசித் தீர்க்கப் பாருங்கள். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். பணம், நகை வாங்கித்தருவதில் குறுக்கே நிற்காதீர்கள். யாரையும் நம்பி உறுதிமொழி தர வேண்டாம். கடவுள் நம்பிக்கை காரிய ஸித்தியை அளிக்கும். குலதெய்வ வழிபாடு நன்மையை அளித்து தீமையை விலக்கும்.

1.9.2020 முதல் கேது லாப வீட்டுக்கு வருவதால் ஷேர் மார்க்கெட் லாபம் தரும். வர வேண்டிய பணம் வந்து சேரும். மூத்த சகோதரர் பக்கபலமாக இருப்பார். நிலுவையிலிருந்த வழக்குகள் சாதகமாகும். ஆன்மிகப் பெரியோரை சந்தித்து ஆசி பெறுவீர்கள்.

ராகு 5-ம் வீட்டுக்கு வருவதால் பிள்ளைகளின் நடவடிக்கைகளைக் கண்காணியுங்கள். அவர்களின் நட்பு வட்டத்தையும் அறிந்து வைத்துக் கொள்வது நல்லது. உங்களின் கனவுகளை அவர்களிடம் திணிக்க வேண்டாம். அவர்கள் உங்கள்மீது கோபப்பட்டால் அனுசரித்துப் போவது நல்லது.

3.5.2020 முதல் 4.6.2020 வரை மற்றும் 30.7.2020 முதல் 31.8.2020 வரை சுக்கிரன் 6-ம் வீட்டில் மறைவதால் எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் அடிக்கடி பழுதாகும்.

வியாபாரத்தில் தெளிவான முடிவெடுப்பீர்கள். சந்தை நிலவரத்தின்படி செயல்படுவீர்கள். வைகாசி, ஆனி, புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் லாபம் அதிகரிக்கும். சொந்த இடத்துக்குக் கடையை மாற்றுவீர்கள். புது ஒப்பந்தங்கள் தேடி வரும். வங்கிக் கடன் தவணையைத் தாமதிக்காமல் செலுத்துவீர்கள். பணியாளர்கள் பொறுப்பை உணர்ந்து நடந்துகொள்வார்கள். கொடுக்கல், வாங்கலில் சுமுகமான நிலை காணப்படும். மூலிகை, அரிசி, பருப்பு, தேங்காய் மண்டி மற்றும் கட்டட வகைகளால் ஆதாயம் அடைவீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அவர்கள் விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். புதிய சலுகைகளும் சம்பள உயர்வும் கிடைக்கும். வெளிநாட்டுத் தொடர்புள்ள நிறுவனங்களில் நல்ல வேலை கிடைக்கும். பணி சம்பந்தப்பட்ட வழக்கில் வெற்றிபெறுவீர்கள். உயரதிகாரிகள் வெளிப்படையாகவே உதவுவார்கள். ஐப்பசி, மாசி மாதங்களில் பெரிய பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.

கலைத்துறையினர் புகழடைவார்கள். அரசு விருது உண்டு. வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும். பெரிய நிறுவனங்கள் அழைக்கும். மூத்த கலைஞர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

பெண்கள் உயர்கல்வியில் தேர்ச்சியடைந்து புதிய வேலையில் சென்று சேர்வார்கள். பெற்றோருடன் இருந்த மோதல் நீங்கும். ஆடை, ஆபரணங்கள் சேரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார்கள்.

மாணவ மாணவியர் அதிகாலையில் எழுந்து படிப்பதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். வகுப்பறையில் வீண் அரட்டை அடிக்காமல், தெரியாதவற்றை ஆசிரியரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். உயர்கல்வியில் வெற்றியுண்டு. அனைத்துப் பாடங்களிலும் அதிக மதிப்பெண் குவிப்பீர்கள்.

இந்த சார்வரி ஆண்டு, உங்களுக்குப் பொருளாதார வளத்தை அளிப்பதுடன், வாழ்வில் புதிய சகாப்தத்தைப் படைக்கும் வல்லமையைத் தருவதாக அமையும்.

பரிகாரம்

திருச்சி மலைக்கோட்டையில் அமர்ந்து அருள்பாலிக்கும் ஶ்ரீஉச்சிப்பிள்ளையாரை வழிபட்டு வாருங்கள். விபத்தில் சிக்கி, அதன்பொருட்டு சிகிச்சை பெற்று வரும் ஏழைகளுக்கு உதவுங்கள். விநாயகர் அருளால் எதிலும் வெற்றி கிடைக்கும்.

கும்பம்தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்கள்

‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’ என்பதை உணர்ந்த உங்களின் ராசிக்கு 11-ம் வீட்டில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் சோம்பல் நீங்கி சுறுசுறுப்படைவீர்கள். வாடியிருந்த உங்களின் முகம் மலரும். கடந்த வருடத்தில் வாட்டி வதைத்த பல பிரச்னைகளுக்கு இந்த வருடத்தில் தீர்வு கிடைக்கும். கணவன் மனைவி அந்நியோன்யம் அதிகரிக்கும்.

சித்திரை, ஆடி, கார்த்திகை, மார்கழி மாதங்களில் உங்களின் அடிப்படை வசதிகள் பெருகும். பிரபலங்களின் நட்பும் கிடைக்கும். பணப்புழக்கம் திருப்திகரமாக இருக்கும். வீட்டில் விருந்தினர் எண்ணிக்கை அதிகரிக்கும். இனி எதிலும் கவனமாகச் செயல்படுவீர்கள். உறவினர்களால் மகிழ்ச்சியும் பலனும் கிட்டும்.

புதிய சிந்தனைகள் பிறக்கும். பிள்ளைகளின் நெடுநாள் எண்ணங்களைப் பூர்த்தி செய்வீர்கள். அவர்களின் வருங்காலத்துக்காக சேமிக்கத் தொடங்குவீர்கள். உங்களின் மகனுக்கு நல்ல இடத்தில் மணப்பெண் அமையும். எதிராகப் பேசியவர்கள், வலிய வந்து நட்பு பாராட்டுவார்கள். புதிய நண்பர்களும் அறிமுகமாவார்கள்.

அரசாங்க அலுவல்கள் சாதகமாக முடியும். புதிய வீடு, வாகனம், பொன் ஆபரணங்கள் வாங்குவீர்கள். புதிய தொழில் தொடங்கலாம். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். திருக்கோயில் திருப்பணிகளில் கலந்துகொள்வீர்கள்.

பொது நல அமைப்புகளில் பொறுப்பேற்பீர்கள். சரியான திட்டமிடலால் எண்ணிய காரியங்கள் நிறைவேறும். நிதானமாக செயல்படுங்கள். கடவுள் நம்பிக்கை கை கொடுக்கும். கனிவான பேச்சு உங்களுக்கு நன்மையை அளிக்கும்.

14.4.2020 முதல் 25.12.2020 வரை சனி லாப வீட்டில் அமர்ந்திருப்பதால் திடீர் யோகம் உண்டு. வருமானம் உயரும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலர், இப்போது உங்களை வந்து சந்திப்பார்கள். வேலையில்லாமல் மன உளைச்சலுடன் இருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பால்ய நண்பர்கள் உங்களின் நிலையறிந்து உதவுவார்கள்.

26.12.2020 முதல் ஏழரைச் சனி தொடர்வதால் அலைச்சல், வேலைச்சுமை அதிகரிக்கும். யாருக் காகவும் ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள்.

14.4.2020 முதல் 7.7.2020 வரை குரு பகவான் உங்களின் ராசிக்கு 12-ம் வீடான மகர ராசியில் அதிசாரமாகி அமர்வ தால் திடீர்ப் பயணங்கள் உண்டு. உறவினர்கள், நண்பர்களால் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும்.

8.7.2020 முதல் 12.11.2020 வரை குரு பகவான் லாப வீட்டிலேயே தொடர்வதால் தொட்டது துலங்கும். திருமணம், சீமந்தம், போன்ற சுப நிகழ்ச்சிகள் வீட்டில் ஏற்பாடாகும். கோயில் கும்பாபிஷேகத்துக்குத் தலைமை தாங்குவீர்கள். செலவுகளைக் குறைக்கத் திட்டமிடுவீர்கள். எங்குச் சென்றாலும் வரவேற்பு அதிகரிக்கும். பிதுர்வழிச் சொத்து கைக்கு வரும்.

13.11.2020 முதல் வருடம் முடியும் வரை 12-ம் வீட்டில் குரு அமர்வதால் எதிர்பாராத பயணங்கள் அதிகரிக்கும். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்துவைக்க முடியவில்லையே என ஆதங்கப்படுவீர்கள். ஃபைனான்ஸ் தொழில் செய்பவர்கள் தகுந்த ஆதாரமில்லாமல் யாருக்கும் பணம் தர வேண்டாம்.

பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகத்தின் பொருட்டு அவர்களைப் பிரிய வேண்டிய சூழ்நிலை உருவாகும். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனைக்கேற்ப உணவு முறைகளை அமைத்துக்கொள்வது நல்லது.

1.9.2020 முதல் வருடம் முடியும்வரை ராசிக்கு 10-ம் வீட்டில் கேது நீடிப்பதால், உத்தியோகத்தில் போராடி முன்னேறுவீர்கள். 1.9.2020 முதல் ராகு 4-ம் வீட்டுக்கு வருவதால் தூக்கமின்மை வந்து நீங்கும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்.

31.8.2020 முதல் 28.9.2020 வரை சுக்கிரன் 6-ம் வீட்டில் மறைவதால் பயணங்களில் கவனமாக இருப்பது நல்லது. கணவன் மனைவிக்குள் வீண் வாக்குவாதங்கள் செய்யாமலிருப்பது நல்லது.

வியாபாரத்தில் அதிரடி மாற்றங்கள் செய்து போட்டியாளர்களைத் திகைக்கச் செய்வீர்கள். கார்த்திகை, மார்கழி மாதங்களில் வரவேண்டிய பாக்கிகள் எல்லாம் வசூலாகும். பழைய சரக்குகள் விற்றுத்தீரும். நம்பிக்கைக்குரியவர்களிடம் கடையை விரிவுபடுத்துவது குறித்து ஆலோசனை செய்வீர்கள். பணியாளர்கள் நல்லவிதமாகப் பணியாற்றுவார்கள். இரும்பு, உணவு வகைகள், கட்டுமானப் பொருள்கள் மூலம் ஆதாயமடைவீர்கள்.

உத்தியோகத்தில் ஊக்கமும் உயர்வும் இல்லாமல் இருந்தவர்களுக்குப் புதிய பதவி தேடி வரும். ஆர்வத்துடன் பணிபுரிவீர்கள். அதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். எதிர்பார்த்தபடி சம்பளம் உயரும், சலுகைகளும் கிடைக்கும். கார்த்திகை, மார்கழி மாதங்களில் வெளி நிறுவனங்களில் நல்ல வாய்ப்புகள் தேடி வரும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.

கலைஞர்களுக்குப் பட்டிதொட்டியெங்கும் பாராட்டு கிடைக்கும். பெரிய நிறுவனங்களிலிருந்து புதிய வாய்ப்புகள் தேடி வரும். சக கலைஞர்களை மதிப்பீர்கள்.

பெண்கள் உடல்நலனில் கவனம் செலுத்துவது நல்லது. திருமணம் சிறப்பாக முடியும். பெற்றோரின் ஆலோசனையின்றி எதிலும் எந்த முடிவும் எடுக்க வேண்டாம்.

மாணவ மாணவியருக்கு நினைவாற்றல் கூடும். உயர்கல்வியில் வெற்றியுண்டு. ஆசிரியர் களின் அன்பைப் பெறுவீர்கள். நல்ல நண்பர்கள் அறிமுகமாவார்கள். விரும்பிய பாடப்பிரிவில் சேர்வீர்கள்.

இந்தப் புத்தாண்டு கடின உழைப்பாலும் சமயோஜித புத்தியாலும் இலக்கை எட்டிப்பிடிக்க வைப்பதாக அமையும்.

பரிகாரம்

புதுச்சேரி-திண்டிவனம் செல்லும் வழியில் உள்ள ஊர் மொரட்டாண்டி. இங்கு கோயில் கொண்டிருக்கும் ஶ்ரீபிரத்யங்கராதேவியை ஞாயிற்றுக் கிழமைகளில் சென்று செந்தாமரை மலரால் அர்ச்சித்து வணங்குங்கள். மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுங்கள். வெற்றி நிச்சயம்.

மீனம்தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்கள்

மென்மையும் விட்டுக்கொடுக்கும் மனமும், எல்லோருக்கும் உதவும் குணமும் கொண்ட நீங்கள், மற்றவர்களை அனுசரித்துப் போகக்கூடியவர்கள். உங்களின் ராசிக்கு 10-வது ராசியில் இந்த சார்வரி ஆண்டு தொடங்குவதால் உங்களின் சாதனை தொடரும். நிர்வாகத்திறன் அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்களைச் சிறப்பாக முடிப்பீர்கள். வருங்காலத்துக்காகச் சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும்.

புதிய வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு நல்ல பதில் வரும். அரசு வகை காரியங்கள் எளிதாக முடியும். உயர்பதவியில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். எதிர்பார்த்த பணம் வரும். சொந்தங்களின் சுயரூபத்தைத் தெரிந்துகொண்டு அதற்கேற்ப இனி செயல்படுவீர்கள். நவீன வாகனம் மற்றும் மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். நீண்ட நாள்களாக நிலுவையில் இருக்கும் பிரார்த்தனைகளை முடிக்க நேரம் கிடைக்கும்.

14.4.2020 முதல் 25.12.2020 வரை சனி 10-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் கௌரவப் பதவிகள் தேடி வரும். வெளிநாட்டினரால் திடீர்த் திருப்பங்கள் ஏற்படும். வருங்காலத் திட்டங்களில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். உடல் நலனில் அக்கறை கொள்ளுங்கள்.

26.12.2020 முதல் 11-ம் வீட்டுக்குள் சனி நுழைவதால் உத்தியோகத்தில் இருந்த பிரச்னைகள் நீங்கும். வேலை சம்பந்தப்பட்ட வழக்கில் வெற்றிபெறுவீர்கள். தாழ்வுமனப் பான்மையிலிருந்து விடுபடுவீர்கள்.

14.4.2020 முதல் 7.7.2020 வரை குரு பகவான் உங்களின் ராசிக்கு 11-ம் வீடான மகர ராசியில் அதிசாரமாகி அமர்வதால், விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசத் தொடங்குவார்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். நட்புவட்டம் விரிவடையும்.

8.7.2020 முதல் 12.11.2020 வரை குரு பகவான் 10-ம் வீட்டில் தொடர்வதால் வேலைச்சுமையால் பதற்றம் அதிகரிக்கும். தங்க ஆபரணங்களை யாருக்கும் இரவல் தரவோ, வாங்கவோ வேண்டாம். பிள்ளைகளிடம் உங்களின் எண்ணங்களைத் திணிக்க வேண்டாம்.

13.11.2020 முதல் ஆண்டு முடியும் வரை குரு உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்வதால் திடீர் யோகம், அதிர்ஷ்டம் உண்டாகும். சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். அவர்களின் ஆலோசனையால் நீங்கள் புதிய பாதையில் செல்வீர்கள். கணவன் மனைவிக்குள் மனம்விட்டுப் பேசுவீர்கள். இருவரும் கலந்தாலோசித்து செலவுகளைக் குறைக்கத் திட்டமிடுவீர்கள். குழந்தை பாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். பிள்ளைகள், அவர்கள் பொறுப்பை உணர்ந்து செயல்படுவார்கள். மகளின் திருமணத்தைச் சிறப்பாக முடிப்பீர்கள்.

வைகாசி, ஆவணி, மார்கழி, தை மாதங்களில் திடீர்த் திருப்பங்கள் ஏற்படும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். ஆடி மாதத்தில் பிள்ளைகளின் உடல்நலத்தில் அக்கறை காட்டுங்கள். மகளின் திருமணத்துக்காக வெளியில் கடன் வாங்குவீர்கள். வாழ்க்கைத்துணை குடும்ப சூழ்நிலை அறிந்து பொறுப்பாக நடந்துகொள்வார்.

1.9.2020 முதல் ராகு 3-ம் வீட்டுக்குள் நுழைவ தால் பிரச்னைகளை எதிர்கொள்ளும் மனவலிமை கிடைக்கும். பிரபலங்களின் உதவி கிடைக்கும். அவர்களின் சுப நிகழ்ச்சிகளில் முன்னுரிமை அளிக்கப்படும்.

இளைய சகோதரர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். சிலர் வீட்டில் கூடுதலாக ஒரு அறை கட்டுவார்கள். சிலர் வாடகை வீட்டிலிருந்து, சொந்த வீட்டுக்குக் குடிபுகுவார்கள். வங்கிக்கடன் கிடைக்கும். நீங்கள் முன்பு செய்த உதவிக்கு இப்போது பலன் கிடைக்கும். ஆன்மிகத்தில் மனம் லயிக்கும்.

28.9.2020 முதல் 23.10.2020 வரை சுக்கிரன் 6-ம் வீட்டில் அமர்வதால் அந்தக் காலகட்டத்தில் கணவன் மனைவிக்குள் சின்னச்சின்ன வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.

வியாபாரத்தில் வைகாசி, ஆவணி மாதங்களில் புதிய முதலீடுகள் செய்து கடையை விரிவுபடுத்துவீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கும். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். சிலர் பங்குதாரர்களை விட்டுப் பிரிய வேண்டியது வரும். கொடுக்கல், வாங்கல் சம்பந்தமாக எதிலும் கையெழுத்திட வேண்டாம். பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிப்பது நல்லது. புதிய நபர்களை நம்பி பெரிய முடிவுகளை எடுக்க வேண்டாம். மார்கழி, தை மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வரவு அதிகரிக்கும்.

உத்தியோகத்தில் வைகாசி, மார்கழி மாதங்கள் சாதகமாக இருக்கும். ஆவணி மாதத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். என்றாலும் பணிச்சுமை இருக்கத்தான் செய்யும். உயரதிகாரி உங்களின் கடின உழைப்புக்கு அங்கீகாரம் அளிப்பார். தை, மாசி மாதங்களில் புது வாய்ப்புகள் தேடி வரும். சம்பள பாக்கி கைக்கு வரும்.

கலைஞர்களின் மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். பெரிய நிறுவனத்துக்கென காத்திருக்காமல் கிடைக்கின்ற வாய்ப்பைப் பயன்படுத்துங்கள்.

பெண்களுக்கு எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் உயர்கல்வி பெற வாய்ப்புகள் வரும். தள்ளித்தள்ளிப் போய்க்கொண்டிருந்த திருமணம் சிறப்பாக முடியும். வெளிநாட்டில் வேலை, மேற்கல்வி அமையும்.

மாணவ மாணவியர் படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது. அலட்சியப்போக்குடன் கடைசி நேரத்தில் படிக்கும் பழக்கம் இனி வேண்டாம். விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் கிடைக்கும். நீங்கள் விரும்பிய கல்விப் பிரிவில் போராடி இடம் பிடிப்பீர்கள்.

இந்தத் தமிழ்ப் புத்தாண்டு, உங்களைத் திட்டமிட்டுச் செயல்படவைப்பதுடன், சிக்கனத் தையும் கடைப்பிடிக்க வைப்பதாக அமையும்.

பரிகாரம்

காஞ்சிபுரத்தில் அருள்பாலித்துக்கொண்டிருக்கும் ஶ்ரீகாஞ்சி காமாட்சி அம்மனை வெள்ளிக்கிழமைகளில் சென்று குங்குமார்ச்சனை செய்து வணங்குங்கள். அகதிகளுக்கு உதவுங்கள். மகிழ்ச்சி தங்கும்.

பகிரவும்...