Main Menu

வாஸ்து சாஸ்திரப்படி எந்தெந்த பரிசுகளை தரக்கூடாது

யானை பொம்மை :

ஜோடியாக உள்ள யானை பொம்மைகளை பரிசாக கொடுப்பது சிறந்தது. உங்களால் வெள்ளி அல்லது தங்கம் பூசப்பட்ட யானை பொம்மைகளை பரிசாக தர முடியவில்லை என்றால், வெங்கலம் அல்லது மரத்தால் செய்யப்பட்ட யானை பொம்மைகளை பரிசாக தரலாம்.

துண்டுகள் மற்று கைக்குட்டை :

துண்டுகள் மற்றும் கைக்குட்டைகளை நிறைப்பேர் பரிசாக தருகிறார்கள். ஆனால் இதனை வாஸ்து சாஸ்திரப்படி அன்பளிப்பாக தரக்கூடாது. இது கொடுப்பவர்களுக்கும் வாங்குபவர்களுக்கும் தீமையை உண்டாக்கும்.

கடிகாரங்கள் :

கடிகாரங்களை பரிசாக தரும் பழக்கம் அதிகப்படியானோருக்கு இருக்கிறது. ஆனால் இவ்வாறு கடிகாரத்தை பரிசாக தருவது எதிர்மறையாக வாழ்நாளை குறைப்பதாக அமைகிறதாம்.

கூர்மையான ஆயுதங்கள் :

கத்தி போன்ற எந்த ஒரு கூர்மையான ஆயுதங்களையும் பரிசாக தரக்கூடாதாம். இது கொடுப்பவர் மற்றும் வாங்குபவர் என இருவருக்கும் கெடுதலை உண்டாக்கும் என வாஸ்து சாஸ்திரம் சொல்கிறது.

மண்ணால் ஆன பொருட்கள் :

இயற்கையாக பூமியிலிருந்து கிடைக்கும் பொருட்கள் போன்ற மண்ணால் ஆன பொருட்களை பரிசாக கொடுப்பது வாழ்நாள் மற்றும் பணத்தை அதிகரிக்க செய்யும். எனவே மண்ணால் செய்த அழகிய சிலைகள், பூந்தொட்டிகள் போன்றவற்றை பரிசாக தரலாம்.

காலணிகள் :

காலணிகளை தருவது மகிழ்ச்சியின்மையை உண்டாக்கும். சூக்களை கூட பரிசாக வழங்க கூடாது என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.

வேலை சம்பந்தமான பொருட்கள் :

நீங்கள் என்ன வேலை செய்கிறீர்களோ அது சம்பந்தமான பொருட்களை பரிசாக கொடுப்பது உங்கள் வேலை திறனை குறைக்கும். உதாரணமாக நீங்கள் ஒரு எழுத்தாளராக இருந்தால், பேனா, புத்தகம் போன்றவற்றை பரிசாக கொடுக்க கூடாது.

வெள்ளி :

வெள்ளி பொருட்களை பரிசாக கொடுப்பது மிக சிறந்தது. வெள்ளி பொருட்கள் லக்ஷ்மியை குறிக்கும்.

தண்ணீர் சம்பந்தப்பட்ட பொருட்கள் :

தண்ணீர் சம்பந்தப்பட்ட பொருட்கள் அதாவது மீன் தொட்டிகள் போன்றவற்றை பரிசாக தருவது நமது அதிஷ்டத்தை மற்றவர்களுக்கு தருவது போன்றதாகும்.

பகிரவும்...