Main Menu

சலசலப்புடன் அதிமுக பொதுக்குழு கூட்டம் நிறைவு

பரபரப்பான சூழலில் கூடிய அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படாமல் நிறைவு பெற்றது. இதற்கிடையே, பொதுக்குழு உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று வரும் ஜூலை 11ம் தேதி அன்று மீண்டும் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன்அறிவித்தார். மேலும், இரட்டை தலைமையை ரத்து செய்து, வலுவான ஒற்றை தலைமையை கொண்டுவர உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், ஒற்றைத் தலைமை விவகாரத்தால் அதிமுக பொதுக்குழு கூட்டம் வானகரம் மண்டபத்தில் சலசலப்புடன் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...