Main Menu

சபரிமலைக்கு பக்தர்கள் வருவதைத் தவிர்க்குமாறு கோரிக்கை

கேரளாவில் 12 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டதையடுத்து, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பக்தர்கள் வருவதைத் தவிர்க்குமாறு கோயில் தேவஸ்தானம் சார்பில் பக்தர்களுக்கு இன்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் மெல்லப் பரவி வருவதுடன் இதுவரை 44 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதில் அதிகபட்சமாக கேரள மாநிலத்தில் 12 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது.

இதனை அடுத்து கேரளாவில் கொரோனா பாதிப்பு தீவிரமடைவதைத் தடுக்கும் வகையில் மக்கள் அதிகமாகக் கூடுவதைத் தவிர்க்குமாறு கேரளா அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

இந்நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குப் பக்தர்கள் வருவதைத் தவிர்க்குமாறு கோயில் தேவஸ்தானம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...