Main Menu

கொவிட்-19 தொற்றால் மோசமான பாதிப்பை எதிர்கொண்ட இரண்டாவது நாடாக மாறியது பிரேஸில்!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் மோசமான பாதிப்பை எதிர்கொண்ட இரண்டாவது நாடாக பிரேஸிலில் மாறியுள்ளது.

பிரேஸிலில் தற்போதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு மொத்தமாக 3 இலட்சத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று (வெள்ளிக்கிழமை) கொரோனா வைரஸ் தொற்றுக்கு 19,969பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 966பேர் உயிரிழந்தனர்.

மேலும், கொரோனா வைரஸ் தொற்றுக்கு 174,412 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 135,430பேர் குணமடைந்துள்ளனர். இதுதவிர 8,318பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.

பகிரவும்...