Main Menu

இந்தியாவில் நான்காயிரத்தை நெருங்கும் கொரோனா மரணங்கள்!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 1 இலட்சத்து 25 ஆயிரத்தை கடந்துள்ளது.

தற்போதைய நிலைவரப்படி இன்று (சனிக்கிழமை) புதிதாக 355 பேர் அடையாலம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 1 இலட்சத்து 25 ஆயிரத்து 149 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் புதிதாக இருவர் உயிரிழந்துள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3728 ஆக உயர்வடைந்துள்ளது.

மேலும் 51 ஆயிரத்து 824 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன், 69 ஆயிரத்து 597 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பகிரவும்...