Main Menu

நாளை முதல் இயங்கும் தொழில்கள் – பட்டியல் வெளியானது!

நாளை முதல் இயங்கும் தொழில்கள் எவை, எவை என்பது குறித்து மத்திய அரசு பட்டியலை வெளியிட்டுள்ளது.

* ஆயுஷ் உள்பட அனைத்து மருத்துவ சேவைகள் செயல்படும்.

* வேளாண் மற்றும் தோட்டத் தொழில்களுக்கு அனுமதி.

* மீன்பிடித் தொழில் தொடர்ந்து இயங்கும்.

* தேயிலை, காப்பி, ரப்பர் தோட்டத் தொழில்கள், அதிகபட்சம் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்படலாம்.

* நிதித்துறை மற்றும் சமூக நலத்துறை செயல்படும்.

* தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் தொடரும். இதில் ஊழியர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.

* பொது வினியோகத்துறை செயல்படும்.

* மாநிலங்கள், மாவட்டங்களுக்கு இடையேயான சரக்கு போக்குவரத்துக்கு அனுமதி.

* ஆன்லைன் மூலம் கற்பித்தல் மற்றும் தொலைதூர கல்விக்கு அனுமதி.

*அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செய்யலாம்.

* வர்த்தகம், தனியார் நிறுவனங்கள் கட்டுப்பாடுகளுடன் இயங்கலாம்.

* கட்டிட தொழில்களை தொடர அனுமதி.

* தனியார் வாகனங்களை மருத்துவம் உள்ளிட்ட அவசர தேவைக்காக இயக்கலாம்.

* அனைத்து மத்திய, மாநில, யூனியன் பிரதேச அலுவலகங்கள் செயல்படும்.

பகிரவும்...