Main Menu

கேப்பாபுலவு விமானப் படை தளத்தில் தனிமைப் படுத்தலில் இருந்த மேலும் 6 கடற் படையினருக்கு கொரோனா

முல்லைத்தீவு – கேப்பாப்புலவு , விமானப்படைத்தளத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த  கடற்படையினர் இருவருக்கு கொரோனாத் தொற்று இருப்பது பரிசோதனைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நேற்று (21) அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மேலும் ஆறு பேருக்கு கொரோனாத் தொற்று இருப்பது பரிசோதனைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இன்று (22)   அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கொரோனா தொற்று இருப்பதாக இனங்காணப்பட்ட ஆறு  கடற்படையினரும் வெலிக்கந்த மருத்துவமனைக்கு இன்றைய தினம்(22) சற்று முன்னர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் எஸ்.சுகந்தன் இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில்,

தனிமைப்படுத்தலுக்காக வெலிசறையிலிருந்து கேப்பாப்புலவு விமானப்படைத்தளம் உள்ளிட்ட தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு  அண்மையில் 400 கடற்படையினர் கொண்டுவரப்பட்டனர்.

அவ்வாறு கொண்டுவரப்பட்டவர்களில் 99 பேருக்கு நேற்று முந்தினம்(19) பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது அவ்வாறு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டவர்களில் இருவருக்கு கொரோனாத் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு நேற்று அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் நேற்று வெலிகந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் ஆறு பேருக்கு தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு இன்று அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் ஆறு பேரும் வெலிகந்த மருத்துவமனைக்கு சற்று முன்னர்  அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில்  வெலிசறையில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ள ஏனைய கடற்படையினரில் 40 பேருக்கான  பரிசோதனைகள் இன்று (22) இடம்பெறுவதாகவும் எனவர்களுக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும்  தெரிவித்துள்ளார்.

பகிரவும்...