Main Menu

குடும்ப உறுப்பினர்களுடன் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அமெரிக்காவுக்கு பயணம்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள்  அமெரிக்கா சென்றுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று (திங்கட்கிழமை) இவர்கள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக எமிரேட்ஸ் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான ஈ.​கே.- 649 என்ற விமானம் மூலம் அதிகாலை 02.55 க்கு பயணமாகியுள்ளனர்.

இதற்கமைய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, மனைவி அயோமா ராஜபக்ஷ, மருமகள் செவ்வந்தி ராஜபக்ஷ, மகன் மனோஜ் ராஜபக்ஷ மற்றும் பேரக் குழந்தைகள் ஆகியோர் அமெரிக்கா சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...