Main Menu

கிளிநொச்சியில் இடம் பெற்ற விபத்தில் இருவர் காயம்

கிளிநொச்சி டிப்போ சந்தியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பகல் 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

பரந்தன் திசையிலிருந்து கிளிநொச்சி நகருக்குள் பயணித்த டிபர் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து நிலையத்தில் தரித்திருந்த முச்சக்கரவண்டி மற்றும் காருடன் மோதியுள்ளது.

இதன்போது விபத்தில் சிக்குண்ட இருவர் காயமடைந்த நிலையில், கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளனர்.

சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பகிரவும்...