Main Menu

கனடாவில் கொலை செய்யப்பட்ட இலங்கை குடும்பம் அடையாளம் ; சந்தேகநபர் கைது

கனடாவின் தலைநகர்  ஒட்டாவாவில் படுகொலை செய்யப்பட்ட  ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு இலங்கையர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்.

இவர்கள்  தெற்கு ஒட்டாவாவிலுள்ள  பார்ஹேவன் புறநகரில் புதன்கிழமை வீடொன்றில் வைத்து கூரிய ஆயுதத்தால் தாக்கி கொல்லப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் தாய் மற்றும் அவரது நான்கு பிள்ளைகள் மற்றும் வீட்டில் வசித்து வந்த 40 வயதுடைய ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளார்கள்.

குழந்தைகளின் தந்தை பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த நான்கு குழந்தைகளும் ஏழு வயதுக்குட்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் 35 வயதுடைய தர்ஷனி பண்டாரநாயக்க என்ற தாயும், 07 வயதுடைய  இனுக விக்கிரமசிங்க, 04 வயதுடைய அஸ்வினி விக்கிரமசிங்க, 02 வயதுடைய றின்யானா விக்கிரமசிங்க மற்றும் 02 மாதங்களான கெலீ விக்கிரமசிங்க ஆகிய நான் பிள்ளைகளும் உயிரிழந்துள்ளனர்.

கொல்லப்பட்ட மற்றைய நபர் காமினி அமரகோன் என்ற 40 வயதுடையவராவார்.

உயிரிழந்தவர்களில் 5 பேர் இலங்கையிலிருந்து கனடாவுக்கு புதிதாக வந்தவர்கள் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் கனடாவில் கல்வி கற்கும் 19 வயதுடைய ஃபேப்ரியோ டி சொய்சா என்ற இலங்கையர் என ஒட்டாவா பொலிஸ்  தெரிவித்துள்ளது.

பகிரவும்...