Main Menu

ஐ.நா கூட்டத்தில் மோடி இன்று உரையாற்றுகிறார்!

ஐ.நா பொருளாதார மற்றும் சமூக சபை உயர் மட்ட கூட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி வாயிலாக உரையாற்றவுள்ளார்.

இதன்போது  உலகில் ஏற்பட்டுள்ள சூழ்நிலை மாற்றம்,  கொரோனாவுக்குப் பிந்தைய பிரச்சினைகள் குறித்தும் சர்வதேச ஒத்துழைப்பு,  வர்த்தகம்,  பாதுகாப்பு குறித்தும்  பிரதமர் நரேந்திர மோடி தமது உரையில் முக்கிய விவாதங்களை எழுப்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் கூட்டத்தின் இறுதி நிகழ்ச்சியில் நோர்வே  பிரதமர் மற்றும் ஐ.நா. சபை பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ்  ஆகியோருடன் இணைந்து மோடி கலந்துரையாடவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலின் நிரந்தரமற்ற உறுப்பினராக இந்தியா தேர்வான பின்னர்  முதல்முறையாக பிரதமர் உரை நிகழ்த்தவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...