Day: July 17, 2020
கொவிட்-19 தொற்று மீண்டும் அதிகரிப்பு: பிரான்ஸில் முகக் கவசம் அணிவது கட்டாயமாகிறது!
பிரான்ஸில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) அச்சுறுத்தல் மீண்டும் எழுந்துள்ள நிலையில், பொது இடங்களில் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்படுகின்றது. முக்கியமாக பல்பொருள் அங்காடிகள், வேலைத்தளங்கள், பொதுமக்களை உள்வாங்கும் இடங்கள் போன்ற அனைத்திலும் கட்டாய முகக்கவசம் அணிவது, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
யாழில் வீதிகளில் பயணிக்கும் பெண்களுக்கு பொலிஸாரின் அறிவிப்பு
யாழ்ப்பாணத்தில் வீதிகளில் பயணிக்கும் பெண்கள் தங்க நகைகளை அதிகளவில் அணிந்து செல்வதை தவிர்க்குமாறு யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி நிகால் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் பல்வேறு கொள்ளை மற்றும் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரைமேலும் படிக்க...
உலக அளவில் கடந்த தசாப்தத்தில் அதிக மக்களை வறுமையில் இருந்து மீட்ட நாடு இந்தியா- ஐ.நா.
உலகில் கடந்த 10 வருட காலத்தில் 27.3 கோடி இந்திய மக்கள் பன்முக வறுமை சூழலில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்டம் மற்றும் ஒக்ஸ்போர்ட் வறுமை மற்றும் மனிதவள மேம்பாடு தொடக்கம் என்றமேலும் படிக்க...
வேற்றுமை கடந்து தமிழர்கள் விழித்தெழ வேண்டும்- சாணக்கியன்
தமிழர்களின் பாரம்பரிய அடையாளங்களைப் பாதுகாக்கவும் உரிமைகளை வென்றெடுக்கவும் தமிழர்களாகிய நாம் வேற்றுமை கடந்து விழித்தெழ வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர்மேலும் படிக்க...
கொவிட்-19 பரவல் அதிகரிப்பு: ஹங்கேரியில் தேசிய விடுமுறை தின கொண்டாட்டங்கள் இரத்து!
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் காரணமாக, தேசிய விடுமுறை தின கொண்டாட்டங்கள் இரத்து செய்யப்படுவதாக, ஹங்கேரியின் பிரதமர் விக்டர் ஓர்பனின் தலைமை அதிகாரி கெர்ஜெலி குல்யாஸ் தெரிவித்துள்ளார். மே மாதத்தில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க ஹங்கேரி அறிமுகப்படுத்திய பெரும்பாலானமேலும் படிக்க...
கொவிட்-19: ரஷ்யாவில் பாதிப்பு மொத்த எண்ணிக்கை ஏழு இலட்சத்து 50 ஆயிரத்தை கடந்தது!
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஏழு இலட்சத்து 50ஆயிரத்தை கடந்துள்ளது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஏழு இலட்சத்து 52ஆயிரத்து 797பேர் வைரஸ் தொற்றினால் பாதிப்படைந்துள்ளனர். மேலும், உலகளவில் கொவிட்-19 தொற்றினால் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்தமேலும் படிக்க...
தேர்தல் ஆணைக் குழுவுக்கும் அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல்
தேசிய தேர்தல் ஆணைக்குழுவுக்கும் அரசியல் கட்சி பிரதிநிகளுக்கும் இடையில் இன்று (வெள்ளிக்கிழமை) விசேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. இதன்போது கொரோனா அச்சுறுத்தல் மத்தியில் பொதுத்தேர்தலை எவ்வாறு நடத்துவது என்பதில் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்கமேலும் படிக்க...
ஐ.நா கூட்டத்தில் மோடி இன்று உரையாற்றுகிறார்!
ஐ.நா பொருளாதார மற்றும் சமூக சபை உயர் மட்ட கூட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி வாயிலாக உரையாற்றவுள்ளார். இதன்போது உலகில் ஏற்பட்டுள்ள சூழ்நிலை மாற்றம், கொரோனாவுக்குப் பிந்தைய பிரச்சினைகள் குறித்தும் சர்வதேச ஒத்துழைப்பு, வர்த்தகம், பாதுகாப்புமேலும் படிக்க...
கொவிட்-19: நாளொன்றுக்கான அதிகபட்ச பாதிப்பை பதிவு செய்தது அமெரிக்கா!
அமெரிக்காவில் அசுரவேகத்தில் பரவிவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 73,388பேர் பாதிப்படைந்ததோடு 963பேர் உயிரிழந்துள்ளனர். இதற்மைய அமெரிக்காவில் வைரஸ் தொற்று பரவியதிலிருந்து பதிவான நாளொன்றுக்கான அதிகப்பட்ச பாதிப்பு எண்ணிக்கை இதுவாகும். உலகிலேயே கொவிட்-19 பெருந் தொற்றினால் அதிகமேலும் படிக்க...
கொரோனா வைரஸ் தொற்று: இலங்கையர்களின் சடலங்களை நாட்டுக்கு கொண்டுவர அனுமதி மறுப்பு
வெளிநாடுகளில் உயிரிழந்தவர்களின் சடலங்களை நாட்டுக்கு கொண்டுவருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கமல் ரத்வத்தே தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக கமல் ரத்வத்தே மேலும் கூறியுள்ளதாவது, “கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வெளிநாடுகளில் நாற்பது இலங்கையர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் நாட்டிலும்மேலும் படிக்க...
பொதுத்தேர்தல்: ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழு இன்று வருகை
பொதுத்தேர்ததலைக் கண்காணிக்கும் நடவடிக்கைகளுக்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இன்று (வெள்ளிக்கிழமை) நாட்டை வந்தடையவுள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இவ்வாறு வருகைத்தரவுள்ள அனைவரும் தனிமைப்படுத்தப்படலுக்கு உட்படுத்தப்படவுள்ளனர். நாட்டில் எதிர்வரும் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலை கண்காணிப்பதற்கு வருகை தரவுள்ளமேலும் படிக்க...
சர்வதேச விமான சேவைகளை இன்று முதல் ஆரம்பிக்கிறது இந்தியா!
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சர்வதேச விமான சேவைகளை இந்தியா இன்று (வெள்ளிக்கிழமை) முதல் ஆரம்பிக்கிறது. இதன்படி அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கான விமான சேவைகளை குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் ஆரம்பிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக விமான போக்குவரத்து துறை அமைச்சர்மேலும் படிக்க...