Main Menu

ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ்: அரையிறுதிக்குள் அடியெடுத்து வைத்தார் நடால்!

உலகின் தலைசிறந்த எட்டு டென்னிஸ் வீரர்கள் பங்கேற்கும் ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடரில், ஸ்பெயினின் ரபேல் நடால் வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

‘லண்டன் 2020’ பிரிவில் நடைபெற்ற போட்டியொன்றில், ஸ்பெயினின் ரபேல் நடால் மற்றும் கிரேக்கத்தின் ஸ்டெபனோஸ் ஸிட்சிபாஸ் மோதினர்.
பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், முதல் செட்டை 6-4 என நடால் கைப்பற்றினார்.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டில் மீண்டெழுந்த ஸிட்சிபாஸ் செட்டை 6-4 என கைப்பற்றி பதிலடி கொடுத்தார்.

இருவரும் தலா ஒரு செட்டைக் கைப்பற்றியதால், வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது செட் பரபரப்படைந்தது.

இதில் சிறப்பாக விட்டுக்கொடுக்காமல் விளையாடிய நடால், செட்டை 6-2 என எளிதாக கைப்பற்றி அரையிறுதிக்குள் முன்னேறினார்.

பகிரவும்...