Main Menu

எஸ்.பி.பி.க்கு பாரத ரத்னா வழங்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் – கங்கை அமரன்

காலமான எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு பாரத ரத்னா விருது வழங்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் என இசையமைப்பாளரும் இயக்குனருமான கங்கை அமரன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று, அந்நோயிலிருந்து குணமாகிய போதிலும் மாரடைப்பால் பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்.

மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் சென்னை செங்குன்றத்தை அடுத்த தாமரைப்பாக்கத்தில் உள்ள அவருடைய பண்ணை இல்ல வளாகத்தில் வைக்கப்பட்டு, அவரது குடும்பத்தினர் சார்பில் அங்கு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன.

பல்வேறு ஊர்களில் இருந்து வந்திருந்த அவரது ரசிகர்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு நீண்ட வரிசையில் நின்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள், பாடகர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பலர் நேரில் வந்து எஸ்.பி.பி.யின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

அதனையடுத்து, அவரது உடல் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், தஞ்சையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இசையமைப்பாளரும் இயக்குனருமான கங்கை அமரன் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு பாரத ரத்னா வழங்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் என தெரிவித்துள்ளார்.

பாரத ரத்னா விருது வழங்கும் குழுவில் தானும் ஒரு உறுப்பினர் என்பதால் அதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

பகிரவும்...