Main Menu

ஊரடங்கு குறித்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டார் ஸ்ருதிஹாசன்!

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும்  நடிகை ஸ்ருதிஹாசன் ஊரடங்கு குறித்த தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.

இது குறித்து தெரிவித்துள்ள அவர், “ தனிமை எனக்கு மிகவும் பிடிக்கும். தனியாக இருக்கும் சமயங்களில் நிறைய வேலைகளை நான்தான் செய்துகொள்கிறேன். பிரபலங்கள் எல்லாம் பாத்திரம் தேய்ப்பாங்களா’ என  யாராவது கேட்டால் ஆச்சர்யமாக இருக்கும்.

ஊரடங்கு தொடங்கியபோது நிறைய பேர் என்கிட்ட பாத்திரம் கழுவற சவாலில் சேரச் சொல்லிக் கேட்டாங்க. பாத்திரம் தேய்ப்பதும், வீட்டைப் பெருக்கிறதும் சவால் கிடையாது. வீட்டை சுத்தமாக வைத்திருப்பது உங்க பொறுப்பு” எனக் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...