Main Menu

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் 39இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

உலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 39இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றினால் மொத்தமாக 18கோடியே மூன்று இலட்சத்து 60ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுதவிர வைரஸ் தொற்றிலிருந்து 16கோடியே 50இலட்சத்து 80ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பு மற்றும் உயிரிழப்பினை எதிர்கொண்ட முதல்நாடாக அமெரிக்கா விளங்குகின்றது.

இதற்கு அடுத்தப்படியாக அதிக பாதிப்பினை எதிர்கொண்ட நாடுகளாக இந்தியா, பிரேஸில், பிரான்ஸ் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் உள்ளன.

பகிரவும்...