Main Menu

ஈரான் விமான விபத்தில் அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளதாக அறிவிப்பு!

ஈரான் தலைநகர் தெஹ்ரானுக்கு அருகில் இடம்பெற்ற விமான விபத்தில் அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானிய அரசத் தொலைக்காட்சி இதுகுறித்த தகவல்களை வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உக்ரைன் தலைநகர் நோக்கிப் பயணித்த போயிங் 737 என்ற விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

மேலெழுந்து சிறிது நேரத்திலேயே குறித்த விமானம் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

விமானத்தில் ஏற்பட்ட திடீர் தொழிநுட்ப கோளாறு காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து இடம்பெற்ற பகுதியில் தொடர்ச்சியாக மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பகிரவும்...