Main Menu

ஈராக்கில் ஐ.எஸ்.பயங்கர வாதிகள் தாக்குதல் : ஐந்து பேர் உயிரிழப்பு

ஈராக்கின் வடக்கு சலாடின் மாகாணத்தில் நேற்று (சனிக்கிழமை) ஐ.எஸ்.பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது.

சலாடினுக்கு வடக்கே உள்ள செம் கிராமத்தின் முதல்வரின் வீட்டை பயங்கரவாதிகள் தாக்கி, அவரையும் அவரது இரண்டு மகன்கள் உட்பட நான்கு பேரையும் கொலை செய்துள்ளனர்.

2017 ஆம் ஆண்டில், ஈராக் தனது அனைத்து பகுதிகளையும் பயங்கரவத குழுவிடமிருந்து மீட்டெடுத்துள்ளதாக அறிவித்துள்ளது.

எனினும் பயங்கரவாதக் குழுவினர் இன்னும் ஈராக்கின் பெரிய பகுதிகளில் அவ்வப்போது தாக்குதல்களை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர்.

ஈராக் இராணுவம் நாட்டின் இந்த பகுதிகளில் குழுவுக்கு எதிராக தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...