“அன்பு ரகுமான் அஞ்சற்க” – ரகுமானுக்காக வைரமுத்து கவிதை!
பொலிவுட் திரையுலகில் தனக்கு எதிராக சதி நடப்பதாக இசைப்புயல் ரகுமான் தெரிவித்துள்ள நிலையில், இது குறித்து கவியரசர் வைரமுத்து கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அன்பு ரகுமான்!
அஞ்சற்க.
வட இந்தியக் கலையுலகம்
தமிழ்நாட்டுப் பெண்மான்களைப் பேணுமளவுக்கு
ஆண்மான்களை ஆதரிப்பதில்லை.
இரண்டுக்கும் உயிர்வாழும்
எடுத்துக்காட்டுகள் உண்டு.
ரகுமான்! நீங்கள் ஆண்மான்;
அரிய வகை மான்.
உங்கள் எல்லை
வடக்கில் மட்டும் இல்லை.”
என்று குறிப்பிட்டுள்ளார்.