Main Menu

இலங்கைக்கு அருகிலுள்ள கடற் பரப்பில் மற்றுமொரு கப்பலில் தீப்பரவல்!

இலங்கைக்கு அருகில் கடற்பரப்பில் மற்றுமொரு கப்பலில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிரிந்தை – மஹா இராவணன் கலங்கரைவிளக்கத்தில் இருந்து கிழக்கு திசையில் 480 கடல்மைல்களுக்கு அப்பால் கப்பல் ஒன்றின் இயந்திர அறையில் தீப்பற்றியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இலங்கை கடற்படையினர் இந்த விடயத்தினைத் உறுதிப்படுத்தியுள்ளதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கொழும்பில் இருந்து சிங்கபூர் நோக்கி பயணித்த கப்பல் ஒன்றிலேயே இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுன்கிறது.

பகிரவும்...