Main Menu

இராணுவத்தை வெளியேற்றுங்கள் எமது பாதுகாப்பை நாங்கள் பார்த்துக் கொள்வோம்

எமது பாதுகாப்பை நாங்கள் பார்த்துக்கொள்வோம். இராணுவம் குண்டை செயலழிக்க வைக்கமட்டும் வீதிக்கு வரட்டும் என வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். 

இராணுவ தளபதியின் கருத்து தொடர்பில் கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

எமது தமிழ் தலைவர்கள் சொன்ன ஒரு சில கருத்துக்களை திரிவுபடுத்தி சிங்கள ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஒரு கருத்தைக் கூறியிருக்கின்றார். அதேபோன்று, பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் ஒரு கருத்தைக் கூறியிருக்கின்றார். ஆனால், எமது தமிழ் மண்ணில் இருந்து இராணுவம் முழுமையாக வெளியேறுமாறு ஒரு போதும் கோரவில்லை. கோரவும் முடியாது. ஒரு நாட்டிற்குள், அப்படியாயின் ஒரு தனிநாடாகத் தான் இருக்க முடியும். 

10 லட்சம் மக்களுக்கு 2 லட்சம் இராணுவம் என இருப்பது மிகவும் மோசமானது. 1983 ஆம் ஆண்டின் நிலைமை போன்று சில எண்ணிக்கையான இராணுவத்தினரை மட்டும் வைத்துக்கொண்டு, நாடு பூராகவும் உள்ள எண்ணிக்கைக்கு சமமாக இராணுவத்தினரை மட்டுமல்ல முப்படையினரையும் வைத்திருக்குமாறு கோருகின்றோம். 

இராணுவத்தினர் தற்காலிகமாக சில கடமைகளைச் செய்கின்றார்கள் என வைத்துக்கொண்டு, இராணுவத் தளபதி மகேஸ் சேனநாயக்க ஒரு கருத்தைக் கூறியிருக்கின்றார். அப்படியென்றால், யுத்தக் குற்றங்கள் இடம்பெறவில்லை என்பது மிகவும் வேடிக்கையாக இருக்கின்றது. 

இன்றைய சூழ்நிலையை சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புகின்றார்களா என கேள்வி எழுப்ப விரும்புகின்றோம். இலங்கையில் போர்க்குற்றம் இடம்பெற்றதென்பதை சர்வதேச நாடுகள் சுட்டிக் காட்டியுள்ள போதிலும், கலப்பு நீதிமன்றப் பொறிமுறையை நடைமுறைப்படுத்துவோம் எனக் கூறிவிட்டு இப்போது முடியாதென்று சொல்கின்றீர்கள். சர்வதேசத்தைப் பார்த்து சவால் விடுகின்றீர்கள். 

போர்க்குற்றம் இடம்பெறவில்லை என்று, இந்த சந்தர்ப்பத்தில் இராணுவ சிப்பாய்கள், சந்திக்குச் சந்தியும், பாடசாலைகளிலும், இராணுவத்தினரை வைத்துக்கொண்டு சொல்கின்றீர்கள். இராணுவத்தை வெளியேற்றுங்கள் எமது பாதுகாப்பை நாங்கள் பார்த்துக்கொள்வோம். 

உண்மையில், பாடசாலைகள், கிராமங்கள், தேவாலயங்கள், கோவில்களில், பொது மக்களின் பாதுகாப்புத் தான் முக்கியமாக இருக்க முடியுமே தவிர, படை சிப்பாய்களை வைத்துக்கொண்டு, எத்தனை நாட்கள் தொடர்ந்து பாதுகாப்பு வழங்க முடியும் என்ற கேள்வி எழுகின்றது. 

பயங்கரவாதிகளின் தாக்குதல் என்றால், அவர்கள் எதிர்பாராத வேளையில் தாக்குதல் மேற்கொள்வார்கள். அதிலும், மக்களின் கிராமிய விழிப்புக்குழுக்கள் மூலமே இந்த தாக்குதல் தொடர்பான பாதுகாப்பினை சாதிக்க முடியும். 

பாதுகாப்பு படைகளினால் பெரியளவில் வேலை செய்ய முடியாது. வேண்டுமென்றால், குண்டைக் கண்டு பிடித்ததன் பின்னர், செயலழிக்கச் செய்ய இராணுவத்தினர் வீதிக்கு வரட்டும். அதைக் கூட தேவைப்பட்டால் எமது தொண்டர் அணிகளை நிறுவ முடியும். ஆனால், சட்டத்தில் இடமில்லை என்று சொல்வீர்கள். 

எமது முன்னாள், போராளிகளை அதைக் கூட செய்வோம். இப்போது அதைச் சர்ச்சையாகக்க விரும்பவில்லை. போர்க்குற்றங்களில் இலங்கை இராணுவம் ஈடுபடவில்லை என நாம் நட்டாற்றில் நிற்கும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஏமாற்ற வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றோம் என்றார். 

பகிரவும்...