Main Menu

இந்தோனேசியாவில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 24 பேர் உயிரிழப்பு!

இந்தோனேசியாவின் பாலம்பேங் பகுதியில், பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து, பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். அத்தோடு 13 பேர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தோனேசியாவின் தெற்கு சுமத்ரா மாகாண தலைநகர் பாலம்பேங் பகுதியில் நேற்று (திங்கட்கிழமை) இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து வீதியைவிட்டு விலகி சுமார் 500 அடி பள்ளத்தாக்கில் விழுந்தது.

இவ்விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 24 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் விபத்து குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பகிரவும்...