Main Menu

இந்தியா-சீனா இடையே எல்லைத் தகராறுக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை

இந்தியா-சீனா இடையேயான எல்லைத் தகராறுக்கு தீர்வு காண்பதற்காக, இரு நாட்டு உயர்நிலைக் குழுக்கள் டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

இதற்கான சிறப்பு பிரதிநிதிகளின் 21ஆவது கூட்டம் சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக 22ஆவது கூட்டம் டெல்லியில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையில் இந்திய குழுவும், சீன வெளியுறவு அமைச்சர் வாங்-யி தலைமையில் அந்நாட்டு குழுவும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் சந்தித்த பிறகு, எல்லைத் தகராறு தொடர்பாக நடைபெறும் முதல் பேச்சுவார்த்தை என்பதால் முக்கியத்துவம் பெறுகிறது. இந்தியா-சீன இடையே, 3488 கிலோமீட்டர் நீள எல்லைக் கோடு தொடர்பாக சர்ச்சைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...