Main Menu

இந்தியாவில் 240 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று 169 ஆக இருந்தது. இந்நிலையில் இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 240 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை கூறி உள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 86 ஆயிரத்து 611 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 161 பேர் உள்பட இதுவரை 4 கோடியே 41 லட்சத்து 53 ஆயிரத்து 504 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது ஆஸ்பத்திரிகளில் 2,335 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது நேற்றை விட 78 அதிகமாகும். தொற்று பாதிப்பால் நேற்று ராஜஸ்தானில் ஒருவர் இறந்துள்ளார். மொத்த பலி எண்ணிக்கை 5,30,772 ஆக உயர்ந்துள்ளது.

பகிரவும்...