Main Menu

பிறந்த நாளை முன்னிட்டு முதலமைச்சருக்கு எண் வடிவில் தமிழ் எழுத்துகள் மூலம் வாழ்த்து தெரிவித்த காவலர்

நெல்லை மாநகர ஆயுதப் படையில் காவலராக பணியாற்றுபவர் சரவண சந்திரன். 2013-ம் ஆண்டு பணியில் சேர்ந்த இவர் தமிழ் மீது மிகவும் ஆர்வம் கொண்டு தமிழ் தொடர்பான பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகிறார். தமிழ் வளர்ச்சிக்காக தமிழ் எழுத்துக்களை எண்களை பயன்படுத்தி ஆத்திச்சூடி தமிழ் இலக்கிய படைப்புகளை எழுதி சாதனை செய்துள்ளார். இவரது சாதனையை பாராட்டி கலாம் உலக சாதனை புத்தகத்திலும் இவரது பெயர் இடம் பெற்றுள்ளது. தமிழ் வளர்ச்சிக்காகவும் தமிழக மக்களின் நலனுக்காகவும் அயராது பாடுபட்டு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்த தினம் இன்றைய தினம் கொண்டாடப்படும் நிலையில் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் 136 எண்களை பயன்படுத்தி தமிழ் எழுத்து வடிவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இனிய பிறந்தநாள் விழா என்ற வாழ்த்து பதாகை ஒன்றை உருவாக்கி வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ் மீது ஆர்வம் கொண்ட காவலர், தமிழக முதலமைச்சருக்கு எண் வடிவில் தமிழ் எழுத்துக்களை கொண்டு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து உள்ளது பாராட்டை பெற்றுள்ளது.

பகிரவும்...