Main Menu

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் குறைந்தது?

இந்தியாவில் கடந்த 2 மாதங்களில் இல்லாத அளவிற்கு கொரோனா தொற்றின் தாக்கம் வெகுவாக குறைந்துள்ளது.

இதன்படி கடந்த  ஒகஸ்ட் மாதத்தை தொடர்ந்து பாதிப்பு உச்சம் பெற்று வந்த நிலையில், 63 நாட்களுக்கு பிறகு கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்துள்ளது.

அந்தவகையில் நேற்று (திங்கட்கிழமை) 54 ஆயிரத்து 265 பேர் புதிய தொற்றாளர்களாக கண்டறியப்பட்டுள்ள நிலையில், 710 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 71 இலட்சத்து 73 ஆயிரத்தை கடந்துள்ளதுடன், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 9 ஆயிரத்தை கடந்துள்ளது.

மேலும் 62 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சைப் பெற்று வீடுகளுக்கு திரும்பியுள்ளதுடன், 8 இலட்சத்து 32 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

பகிரவும்...