Main Menu

ஆபிரிக்க குழந்தைகள் மிக மோசமான வறுமையில் வாழப்போகும் அபாயம் – ஆய்வு அறிக்கை

ஆபிரிக்காவில் மிக மோசமான வறுமையில் குழந்தைகள் வாழ்வார்கள் என்று ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆபிரிக்காவில் சுமார் 30.5 கோடி குழந்தைகள் 2030ம் ஆண்டில் கொடிய வறுமையில் வாழ்வார்கள் என்று ‘ஓவர்சீஸ் டெவலப்மென்ட் இன்ஸ்டிடியூட்’ எனும் ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த எண்ணிக்கை 2000ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் மூன்று மடங்கு அதிகமாகும். கடந்த ஆண்டு ஐ.நா அறிக்கையின் படி வறுமையில் இருக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 43 சதவிகிதமாக காணப்பட்டது.

ஆபிரிக்காவின் சஹாரா பாலைவனம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள நாடுகளில் எதன் காரணமாக குழந்தைகள் வறுமையில் இருக்கிறார்கள் என்பதை ஐ.நா பட்டியலிட்டுள்ளது.

அந்தவகையில், சுத்தமான தண்ணீர் போதிய அளவு கிடைப்பதில்லை, ஏற்றத்தாழ்வான பொருளாதாரம், குறைந்த அளவு வருமானம் போன்ற காரணங்களை ஐ.நா. முன்வைத்தது.

எனினும், ஆபிரிக்க நாடுகளில் குழந்தைகள் வறுமை மிகப் பெரிய பிரச்சினையாகவுள்ளது. சில நாட்டு அரசுகள் இதனைச் சரியாகப் புரிந்துகொண்டு தங்கள் நாட்டு கொள்கைகளில் சில முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளன.

அதேவேளை வறுமை ஒழிக்கப்பட வேண்டும் என்றும் குழந்தைகள் வறுமையில் இருப்பதை முற்றிலும் ஒழித்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்திலும் உலக நாடுகள் தற்போது காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...