Main Menu

பேச்சுவார்த்தைகள் ஊடாக முன்நோக்கி செல்லவே விரும்புகின்றோம்: மஹிந்த

பேச்சுவார்த்தைகளை நடத்தி, முன்னேற்றகரமான வழியில் செல்ல வேண்டும் என்பதுதான் எமது நோக்கமென ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின்  பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினருக்கு இடையில், நேற்று (வெள்ளிக்கிழமை) 8 ஆவது சுற்று பேச்சுவார்த்தை இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்

அத்துடன் இந்தப் பேச்சுவார்த்தைகள் ஒருவேளை தோல்வியில் முடிவடைந்தால் மாற்று ஏற்பாடு ஒன்றை மேற்கொள்ளும் வகையிலேயே, சுதந்திரக் கட்சி சார்பில் வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்படுவாரென அறிவித்துள்ளோம் எனவும் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதற்கான எழுத்துமூலமான அறிவித்தலையும் நாம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்கியுள்ளோம். எவ்வாறாயினும், இதுதான் இறுதித் தீர்மானம் என்று எம்மால் கூறமுடியாது எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

பகிரவும்...