Main Menu

அவதூறு வழக்கு : பிணையில் விடுதலையானார் நெல்லை கண்ணன்!

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் குறித்து அவதூறாக பேசிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட தமிழறிஞர் நெல்லை கண்ணன் பிணையில் விடுதலையாகியுள்ளார்.

இந்த  விவகாரம் தொடர்பில் தான் பேசிய கருத்துக்கள் தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், வழக்கை இரத்து செய்யுமாறு வலியுறுத்தி மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

குறித்த மனு இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட நிலையில், மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில், நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் மாநாடு நடைபெற்றது.

அதில் பங்கேற்று பேசிய நெல்லை கண்ணன், பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா உள்ளிட்டோர் குறித்து அவதூறு பரப்பியதாக, பாஜகவினர் தமிழகம் முழுவதும் பல்வேறு பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்தனர். இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...