Main Menu

அறிவிப்பாளர் திலகம் A.S ராஜா அவர்கள் விருது வழங்கி கௌரவிப்பு

பாரீஸ் பன்னாட்டு உயர் கல்வி நிறுவனம் 08/09/2018 – 09/09/2018 (சனி, ஞாயிறு)  ஆகிய தினங்களில் நடாத்திய 3 வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாட்டிற்கு, TRT தமிழ் ஒலி தனது ஊடகப் பணியை செவ்வனே வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி இரண்டு நாள் அமர்வுகளும் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றன. இந்த நிகழ்வில் பல பல்துறை கலைஞர்கள் மதிப்பளிக்கப்பட்டார்கள்.

எமது TRT தமிழ் ஒலி வானொலியில் அன்றிலிருந்து இன்று வரை எம்முடன் பணியாற்றும் மூத்த அறிவிப்பாளர், அறிவிப்பாளர் திலகம் A.S ராஜா (திரு.அ.சிறீஸ்கந்தராஜா) அவர்கள் “காந்தக்குரலோன்” என்னும் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். உண்மையில் இந்த விருதானது அவரின் சேவைக்கும் கடமை உணர்வுக்கும் கிடைத்த ஒரு வெகுமதியாக கருதி, நாம் மகிழ்வுறுகிறோம் .

மேலும் அவர் தொடர்ந்தும் பல விருதுகளை வெல்ல வாழ்த்தும் இந்த வேளையில், இந்த நிகழ்வின் பிரதான அமைப்பாளரான  பேராசிரியர் முனைவர் மரியாதைக்குரிய திரு ச.சச்சிதானந்தம் அவர்களுக்கும், TRT தமிழ் ஒலி வானொலி சார்பில் எமது  நெஞ்சார்ந்த நன்றியை நவில்கின்றோம்.


 

 

 

பகிரவும்...