Main Menu

அரசியல் கைதிகள் எவரும் விடுவிக்கப் படவில்லை – அருட்தந்தை சக்திவேல்

சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் எவரும் விடுவிக்கப்படவில்லை,  நாட்டில் உள்ள பல சிறைச்சாலைகளில் 89 தமிழ் அரசியல் கைதிகள் உள்ளனர் அவர்களில் எவரும் இதுவரை விடுவிக்கப்படவில்லை என அரசியல் கைதிகளை விடுப்பதற்கு தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட் தந்தை ம. சக்திவேல் தெரிவித்துள்ளார்.’

அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள ஏழு அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டதாக ஊடகங்களி்ல் வெளிவந்துள்ள செய்திகள் தொடர்பில் அவரிடம் வினவிய போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டதாக இதுவரை அரசாங்கம் கூட உத்தியோகபூர்வமாக எவ்வித அறிவித்தலையும் வெளியிடவில்லை இந்த நிலையில் சில ஊடகங்கள் எவ்வாறு இச் செய்தியை வெளியிட்டுள்ளனர் என தமக்குத் தெரியாது. 

எனவும், விடுவிக்கப்பட்டவர்கள் யார்  என்பது பற்றியும் எவ்வித தகவல்களும் இல்லை ஆனால் சிறைச்சாலைகளில் உள்ள 89 அரசியல் கைதிகளில் நான் அறிய எவரும் இதுவரை விடுவிக்கப்படவில்லை.

கடந்த 2015 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று  ஒரு அரசியல் கைதி மாத்திரம் விடுவிக்கப்பட்டார் என்றும் அதனைதவிர இன்று எவரும்விடுவிக்கப்படவி்ல்லை எனவும் அருட்தந்தை சக்திவேல் தெரிவித்துள்ளார்

பகிரவும்...