துயர் பகிர்வோம் – உயர்திரு. இலங்கையர் கனகசபை அரியரட்ணம் (தங்கராசா) அரியம் மாஸ்டர் (09/03/2025)

தாயகம் இலங்கை புங்குடுதீவு 4ம் வட்டாரம் இறுபிட்டியை பிறப்பிடமாகவும், கரம்பன் ஊர்காவற்றுறையை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் பாரிஸை வதிவிடமாகவும் கொண்டிருந்த உயர்திரு.இலங்கையர் கனகசபை அரியரட்ணம் (தங்கராசா) அரியம் மாஸ்டர் அவர்கள் 04/03/2025 அன்று பிரான்சில் காலமானார்.
அன்னார் புங்குடுதீவு 4ம் வட்டாரத்தை சேர்ந்த இலங்கையர் கனகசபை – நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், கரம்பன் கிழக்கு ஊர்காவற்றுறையை சேர்ந்த சபாரத்தினம் -நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், காலம் சென்ற சத்தியவதி அவர்களின் பாசமிகு கணவரும், பிரான்ஸை சேர்ந்த உமாசங்கர், உதயசங்கர், உதயகௌரி ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்
குடும்பத்தினர்
இப்பிரிவு துயரில் TRT தமிழ் ஒலி குடும்பமும் பங்கெடுத்து கொள்வதுடன் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.