Main Menu

COVID-19: சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அதன் சேவைகளை 96% குறைக்கிறது; 9 விமானங்கள் மட்டுமே செயல்படும்.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம், ஏப்ரல் மாதம் வரைக்குமான அதன் செயல்பாடுகளை 96 விழுக்காடு வரை குறைத்துக்கொள்ளவிருப்பதாக அறிவித்துள்ளது.

COVID-19 கிருமிப் பரவல் காரணமாக பல்வேறு உலக நாடுகள் பயணத் தடைகளை விதித்து வரும் வேளையில், நிறுவனம் அத்தகைய முடிவை எடுத்துள்ளது.

அதை முன்னிட்டு, 138 SIA, SilkAir விமானங்களின் சேவைகளை நிறுவனம் நிறுத்தி வைக்கிறது.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திடம் மொத்தம் 147 விமானங்கள் செயல்படுகின்றன.

SIA குழுமத்தின் மலிவுக் கட்டண விமானமான Scoot நிறுவனமும் அதன் செயல்பாடுகளைக் குறைத்துக்கொள்கிறது.

Scoot நிறுவனத்தின்கீழ் செயல்படும் 49 விமானங்களில் 47 விமானங்கள் செயல்படாது. 

பகிரவும்...