உலகம்
தென் கொரியாவில் ஆட்சிக் கவிழ்ப்புச் சதி வழக்கில் முன்னாள் நீதியமைச்சருக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை

தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலின் சர்ச்சைக்குரிய ஆட்சிக்கவிழ்ப்புச் சதி முயற்சிக்குத் துணையாகச் செயற்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் நீதியமைச்சர் பாக் சுங்-ஜேவுக்கு (Park Sung-jae) சியோல் மத்திய மாவட்ட நீதிமன்றம் 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து இன்றுமேலும் படிக்க...
கட்டாரில் உள்ள உலகின் மிகப்பெரிய எரிவாயு ஆலையில் பயங்கர வெடிப்புச் சம்பவம் : 54 பேர் காயம் – 18 பேரைக் காணவில்லை

கட்டாரின் பிரதான திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர வெடிப்புச் சம்பவத்தில் 54 பேர் காயமடைந்துள்ளதுடன், மேலும் 18 பேர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கட்டாரின் ‘ராஸ் லஃபான்’ தொழிற்துறை நகரில் உள்ள ‘பர்சான்’மேலும் படிக்க...
பிலிப்பைன்ஸில் பாடசாலையில் துப்பாக்கிச் சூடு

பிலிப்பைன்ஸில் உள்ள பாடசாலை ஒன்றில் இன்று (22) நடந்த துப்பாக்கி சூட்டில் 3 மாணவர்கள் பலியாகியுள்ளனர். பிலிப்பைன்ஸ் மத்திய பகுதியில் தக்லோபன் நகரில் உள்ள பாடசாலை ஒன்றிலேயே இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் பதிவாகியுள்ளது. வழமைப்போல் பாடசாலை இயங்கி வந்த நிலையில்,மேலும் படிக்க...
லெபனான் மீது இஸ்ரேல் கொடிய தாக்குதல்; 18 பேர் உயிரிழந்தாக தகவல்

தெற்கு லெபனான் மீது இன்று (19) நடத்தப்பட்ட இஸ்ரேலியத் தாக்குதல்களில் குறைந்தது 18 பேர் உயிரிழந்ததாக லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளையில், அண்மைய மோதல் தீவிரமடைந்ததிலிருந்து நிகழ்ந்த மிக மோசமான இந்த தாக்குதலில் நான்கு இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டதாக அந்நாட்டுமேலும் படிக்க...
இந்தோனேசியாவில் விடுமுறை நாட்களில் இலவச உணவுத் திட்டம் நிறுத்தம்

இந்தோனேசியாவில் அரசாங்கத்தின் வீண் விரயங்களுக்கு எதிராகவும், மோசமடைந்து வரும் பொருளாதார நிலையைச் சீரமைக்கக் கோரியும் நடத்தப்பட்ட மக்கள் போராட்டங்களைத் தொடர்ந்து, விடுமுறை நாட்களில் இலவச உணவு வழங்கும் திட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க அந்த நாட்டு அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அந்தமேலும் படிக்க...
சுவிஸில் இன்று நடைபெறவிருந்த அமெரிக்க – ஈரான் பேச்சு வார்த்தைகள் இரத்து

சுவிட்சர்லாந்தின் பர்கென்ஸ்டாக் (Burgenstock) மலைப்பகுதி விடுதியில் வெள்ளிக்கிழமையன்று (19) நடைபெறவிருந்த அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பேச்சுவார்த்தைகள் நடைபெறாது என்று சுவிஸ் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக தெஹ்ரான் மற்றும் வொஷிங்டன் இடையே எட்டப்பட்ட ஒப்பந்தத்தைச் செயல்படுத்துவது குறித்தமேலும் படிக்க...
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் இன்று 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இன்று காலை (16) இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இதன் மையப்புள்ளி, பாலு நகருக்குத் தென்கிழக்கே சுமார் 42 கி.மீ தொலைவில், 10 கி.மீ ஆழத்தில்மேலும் படிக்க...
நோர்வே இளவரசியின் மகனுக்கு 4 ஆண்டுகள் சிறை

நோர்வே நாட்டின் பட்டத்து இளவரசியின் மகன் பாலியல் வழக்கில் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவருக்கு 4 ஆண்டுகால சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நார்வேயின் பட்டத்து இளவரசி மெட்டே-மாரிட்டின் 29 வயதான மகன் மரியஸ் போர்க் ஹோய்பி மீதுமேலும் படிக்க...
போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா-ஈரான் உடன்பாடு

தங்கள் போரை முடிவுக்குக் கொண்டுவரவும், ஈரான் மீதான அமெரிக்க முற்றுகையை நிறுத்தவும், ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கவும் ஒரு உடன்பாட்டுக்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க மற்றும் ஈரானிய அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த பூர்வாங்க ஒப்பந்தம் எண்ணெய் விலைகளில் சரிவை ஏற்படுத்திய போதிலும், ஈரானின்மேலும் படிக்க...
உலகின் முதல் ட்ரில்லியனரான எலான் மஸ்க்

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டதைத் தொடர்ந்து அதன் உரிமையாளரான எலான் மஸ்க், உலகின் முதல் டிரில்லியனர் என்ற சாதனையை படைத்துள்ளார் எக்ஸ் சமூக வலைதளத்தின் உரிமையாளரான எலான் மஸ்க், ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் தற்போது பங்குச்மேலும் படிக்க...
தென்கொரிய முன்னாள் ஜனாதிபதிக்கு நீதிமன்றம் விதித்த 30 ஆண்டு சிறைத்தண்டனை

தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு (Yoon Suk Yeol) அந்நாட்டு நீதிமன்றம் 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அதிரடித் தீர்ப்பளித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த டிசம்பர் மாதம் 24ஆம் திகதி அவர் நாட்டில் அமுல்படுத்தியமேலும் படிக்க...
AI வளர்ச்சியால் நிரந்தர வேலை இழப்புகள் ஏற்படலாம் – ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி எச்சரிக்கை

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மனித அறிவாற்றலை பிரதிபலிக்கும் வகையில் மிக வேகமாக வளர்ந்து வரும் நிலையில், எதிர்காலத்தில் உலகளவில் நிரந்தர வேலை இழப்புகள் ஏற்படக்கூடும் என ஆந்த்ரோபிக் (Anthropic) நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி டாரியோ அமோடி (Dario Amodei)மேலும் படிக்க...
அமெரிக்க தாக்குதல் எதிரொலி – ஹார்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் அறிவிப்பு

அமெரிக்க தாக்குதலைத் தொடர்ந்து ஹார்முஸ் நீரிணை மூடப்படுவதாக ஈரான் ராணுவம் அறிவித்துள்ளது. ஹார்முஸ் நீரிணையைக் கடக்க முயலும் கப்பல் எதுவாக இருந்தாலும் துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் என்றும் அது எச்சரித்துள்ளது. ஈரான் – அமெரிக்கா இடையேயான போர், தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தாலும் அவ்வப்போதுமேலும் படிக்க...
தென்னாபிரிக்கா-வில் கொடூர துப்பாக்கிச்சூடு: 12 பேர் உயிரிழப்பு, 9 பேர் காயம்

தென்னாபிரிக்காவின் ஜொஹன்னஸ்பேர்க் நகரின் புறநகர்ப் பகுதியொன்றில் இடம்பெற்ற கொடூரமான துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளனர். கிளீவ்லேண்ட் (Cleveland) பகுதியில் அமைந்துள்ள அத்துமீறிய குடியேற்றவாசிகள் வாழும் பகுதியிலேயே இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் நடத்தப்பட்டுள்ளதுடன், இதில் மேலும் 9 பேர் காயமடைந்துள்ளதாகமேலும் படிக்க...
உலகில் பிறப்பு விகிதம் குறைவதற்கு ஐபோன் மற்றும் நவீன தொலைபேசிகளே காரணம்?: ஆய்வுகளில் அதிர்ச்சித் தகவல்

உலகளவில் பிறப்பு விகிதம் குறைந்து வருவதற்கு மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்வது மட்டுமே காரணம் அல்ல என்றும், ஐபோன் உள்ளிட்ட நவீன தொலைப்பேசிகளின் அதீத பயன்பாடே இதற்கு முக்கியக் காரணம் என்றும் இரண்டு புதிய ஆய்வுகள் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளன. அமெரிக்காவின் தேசியமேலும் படிக்க...
சுட்டு வீழ்த்தப்பட்ட உலங்கு வானூர்தி ; ஈரான் மீது மீண்டும் தாக்குதலை ஆரம்பித்த அமெரிக்கா

ஹார்முஸ் நீரிணைக்கு மேல் பறந்த அமெரிக்க ஹெலிகொப்டர் ஒன்றை ஈரான் சுட்டு வீழ்த்தியதாக ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல்களை மீண்டும் தொடங்கியுள்ளது. ஹெலிகொப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்கப் படைகள் செவ்வாய்க்கிழமை (09)மேலும் படிக்க...
அயர்லாந்தில் 45 குற்றச் சாட்டுகளைக் கொண்ட நபர் பாஸ்டராக நியமனம்

கிழக்கு பெல்ஃபாஸ்டில் உள்ள அயர்லாந்து தேவாலயம் ஒன்றில், 45 குற்றவியல் பின்னணிகளைக் கொண்ட நபர் ஒருவர் பாஸ்டராக (Pastor) நியமிக்கப்பட்ட விவகாரத்தில், தேவாலயத்தின் பாதுகாப்பு விதிகளில் கடுமையான குறைபாடுகள் மற்றும் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜோ டர்னர் (Joe Turner)மேலும் படிக்க...
7 ஆண்டுகளுக்குப் பின் வடகொரியா சென்றார் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், வடகொரியாவை சென்றடைந்துள்ளார். ஷி ஜின்பிங் பியோங்யாங்கை வந்தடைந்துள்ளதாக, சீனாவின் உத்தியோகபூர்வ செய்தி நிறுவனமான சின்ஹவா செய்தி நிறுவனம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. பொருளாதார மற்றும் அரசியல் பலன்களை வழங்குவதற்கு ஈடாக, வடகொரியா மீதானமேலும் படிக்க...
பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நில நடுக்கத்தால் 15பேர் பலி , 129 பேர் காயம்

பிலிப்பைன்ஸை உலுக்கிய 7.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளதாகஅந்நாட்டு குடிமைப் பாதுகாப்பு அலுவலகம் (Office of Civil Defense) தெரிவித்துள்ளது. இந்த பேரிடர் தொடர்பான மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- …
- 172
- மேலும் படிக்க

