இலங்கை
யாழ் மாவட்டத்துக்கான தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் நாளை ஆரம்பம்
பிசிஆர் பரிசோதனையை குறைக்க எவ்வித எதிர்பார்ப்பும் இல்லை என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். சுகாதார நிபுணர்கள் பகுப்பாய்வின் படி பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுவதாக ´தெரன அருண´ நிகழ்ச்சியில் இன்று கலந்துகொண்டு இராணுவத்தளபதி தெரிவித்திருந்தார். தற்போது முன்னெடுக்கப்படும் தடுப்பூசிமேலும் படிக்க...
சதொச விற்பனை நிலையங்கள் மூலம் 1,000 ரூபாய் நிவாரணப் பொதி – அரசாங்கம்
சதொச விற்பனை நிலையங்கள் மூலம் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அத்தியாவசிய பொருட்களுடன் 1,000 ரூபாய் நிவாரணப்பொதி வழங்கப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அமைச்சர், இந்த பொதிகளில் 10 அத்தியாவசிய பொருட்கள் இருக்கும்மேலும் படிக்க...
வெள்ள நிவாரண உதவியாக 80,000 யூரோ நிதி உதவி
இலங்கையில் மே மாதத்தின் நடுப்பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை தொடர்ந்து அவசர உதவி மற்றும் மனிதாபிமான அடிப்படையில் ஐரோப்பிய ஆணைக்குழு 80,000 யூரோ நிதி வழங்கியுள்ளது. இந்த உதவி கொழும்பு, காலி மற்றும் கம்பஹா மாவட்டங்களில் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள 7,500மேலும் படிக்க...
கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப் பட்டிருந்த யாழ்.பல்கலை விரிவுரையாளர் உயிரிழப்பு
கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வந்த யாழ்.பல்கலைக்கழக ஆங்கில விரிவுரையாளர் ஒருவர், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம்- அரியாலை பகுதியை சேர்ந்த திருமதி ஸ்ரீரஞ்சினி ஆனந்தகுமாரசாமி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிந்த விரிவுரையாளரின் குடும்ப உறுப்பினர் ஒருவருக்குமேலும் படிக்க...
இரா.சம்பந்தன் அவர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டார் பிரதமர் மஹிந்த
திருகோணமலை மாவட்டத்திற்கு கொரோனா பரிசோதனை செய்வதற்குரிய பி.சி.ஆர் இயந்திரத்தை அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார். மாவட்ட வைத்தியசாலைக்கு கொரோனா பரிசோதனை செய்யும் இயந்திரம் இல்லாமையை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் பிரதமரின் கவனத்திற்குமேலும் படிக்க...
இலங்கையில் பயங்கரவாத தாக்குதல்கள் நடக்கலாம்- அமெரிக்கா எச்சரிக்கை
இலங்கை செல்ல விரும்பும் மக்களுக்கு அமெரிக்கா நோய் தடுப்பு மையம் அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது. இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் ஒரு செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையில் உள்ள அமெரிக்கர்கள் கவனமாக இருக்க வேண்டும். இலங்கையில் கொரோனா பாதிப்பு தீவிரமாக இருக்கிறது. ஏற்கனவேமேலும் படிக்க...
புத்த ரஷ்மி தேசிய வெசாக் வலயம் பிரதமர் தலைமையில் திறந்து வைப்பு
கொழும்கு ஹுணுபிட்டிய கங்காராம விகாரையில் புத்த ரஷ்மி தேசிய வெசாக் வலயம் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரும், பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷவினால் (26) பிற்பகல் திறந்து வைக்கப்பட்டது. கங்காராம விகாரைக்கு வருகைதந்த பிரதமர் மற்றும் அவரது பாரியார் சமயமேலும் படிக்க...
சந்தர்ப்பங்கள் விரைவாக பயன்படுத்தப்பட வேண்டும்
நாட்டின் பொருளாதாரத்திற்கான பங்களிப்பாளர்களாக மாறுவதுடன் எமது மக்களின் பொருளாதாரக் கட்டமைப்பும் பலமானதாக உருவாகுவதற்கு கிடைக்கின்ற வாய்ப்புக்கள் அனைத்தும் சரியான முறையில் விரைவாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். கிளிநொச்சி, பூநகரி கடற்றொழில் பிரதேசங்களுக்கு நேற்று (26)மேலும் படிக்க...
தடுப்பூசி செலுத்துதல் தொடர்பில் இராணுவ தளபதியின் விஷேட அறிவிப்பு
சீனாவிடம் இருந்து நன்கொடையாக கிடைத்த 5 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசியில் இருந்து 375,000 தடுப்பூசிகளை இரண்டாவது சொட்டு வழங்குவதற்காக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அத்துடன் மிகுதியான 125,000 தடுப்பூசிகள் காலி, மாத்தறை மற்றும் குருணாகல்மேலும் படிக்க...
கிளிநொச்சி வைத்திய சாலையில் இருந்தும் கொரோனா நோயாளி தப்பியோட்டம்!
கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கொரோனாத் தொற்றுக்குள்ளான சிறைக் கைதி ஒருவர் இன்று (புதன்கிழமை) காலை வைத்தியசாலையிலிருந்து தப்பி ஓடியுள்ளார். இயக்கச்சி கொரோனா சிகிச்சை நிலையத்தில் தங்கியிருந்த வெளிமாவட்டத்தைச் சேர்ந்த சிறைச்சாலை ஒன்றின் கைதியே இவ்வாறு தப்பி ஓடியுள்ளார். தனக்கு கடும் நெஞ்சுவலிமேலும் படிக்க...
வெசாக் தினத்தன்று வெறிச்சோடி காணப்படும் விகாரைகள்
கொரோனா தொற்றுநோய் பரவலால் அரசாங்கம் விதித்த கடுமையான பயணக் கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து பெரும்பாலான விகாரைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. வெசாக் தினமான இன்று (புதன்கிழமை) விகாரைகளில் அனைத்து மத நடவடிக்கைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் யாரும் விகாரைகளுக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில்,மேலும் படிக்க...
வௌிநாட்டில் இருந்து பயணிகள் இலங்கைக்கு வருவதற்கு அனுமதி
வௌிநாட்டில் இருந்து பயணிகள் இலங்கைக்கு வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, வெளிநாட்டில் இருந்து இலங்கைக்குள் பிரவேசிக்க விதிக்கப்பட்டிருந்த தடை எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் நீக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும், கடந்த 14 நாட்களுக்குள் இந்தியாவுக்குச் சென்ற பயணிகளுக்கான கட்டுப்பாடுகள்மேலும் படிக்க...
கடலோரமாக ஒதுங்குகின்ற பொருட்கள் எதனையும் பொதுமக்களை தொட வேண்டாமென எச்சரிக்கை!
கொழும்பு மற்றும் நீர்கொழும்பு உள்ளிட்ட நாட்டின் கடற்பரப்பில் ஒதுங்குகின்ற பொருட்கள் எதனையும் பொதுமக்கள் தொட வேண்டாம் என கோரப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுகத்திற்கு அருகே நீர்கொழும்பில் கரையொதுங்கியுள்ள பொருட்கள் தீ விபத்துக்குள்ளான கப்பலில் இருந்து கசியும் இரசாயன திரவியங்களின் படிமங்களாக இருக்கக்கூடும் எனமேலும் படிக்க...
ஏனையவர்களின் பாதுகாப்பிற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவது சமூக கடமை – வெசாக் வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி!
புத்த பெருமானின் போதனைகளின்படி, ஏனைய மனிதர்களின் உயிர்களின் பாதுகாப்பிற்கும் நல்வாழ்விற்கும் அர்ப்பணிப்புடன் செயற்படுவது இந்த தொற்றுநோய் நிலைமைகளுக்கு மத்தியில் எமது சமூக கடமையாகும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். விசாக பூராணை தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயேமேலும் படிக்க...
கிளிநொச்சியில் விபத்து – கிராமசேவகரும் அவரது மனைவியும் உயிரிழப்பு!
கிளிநொச்சி – ஜெயபுரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் கிராமசேவகரும் அவரது மனைவியும் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் – மன்னார் வீதியில் நேற்று(செவ்வாய்கிழமை) இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த முழங்காவில் கிராம சேவையாளரான பி.நகுலேஸ்வரன் என்ற குடும்பத்தரேமேலும் படிக்க...
மட்டக்களப்பு மாநகர சபையினால் அழிக்கப்பட்ட மரங்கள் – இளைஞர்கள் புதிய மரக்கன்றுகளை நட்டனர்
மட்டக்களப்பு மாநகரசபையின் கோட்டை பூங்கா பகுதியில் இன்று(செவ்வாய்கிழமை) இளைஞர்களினால் மரநடுகை வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இன்று காலை கோட்டை பூங்கா பகுதிக்கு வருகைதந்த இளைஞர்கள் இந்த வேலைத்திட்டத்தினை முன்னெடுத்தனர். அண்மையில் குறித்த பகுதியில் காட்சியளித்த மரங்கள் வெட்டப்பட்டதாக முகநூல்கள் ஊடாக பல்வேறு விமர்சனங்கள்மேலும் படிக்க...
சஜித்திற்கு கொரோனா: மூடப்பட்டது எதிர்க்கட்சி அலுவலகம்
சஜித் பிரேமதாசவிற்கும் அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் எதிர்கட்சித் தலைவர் அலுவலகம் மூடப்பட்டுள்ளது. குறித்த அலுவலகம் நேற்று (திங்கட்கிழமை) முதல் மூடப்பட்டதாக எதிர்க்கட்சி தலைவர் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் இடம்பெற்ற நாடாளுமன்றக் கூட்டத் தொடரின்போது சஜித் பிரேமதாசவுடன்மேலும் படிக்க...
யாழில் அதிகளவான வீதித்தடைகள் அமைக்கப்பட்டு இராணுவம் மற்றும் பொலிஸார் குவிப்பு
மக்களின் நடமாட்டத்தை குறைப்பதற்காக யாழ்.நகரில் அதிகளவான வீதித்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட பயணத்தடை, இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4 மணியுடன் சில கட்டுப்பாடுகளுடன் தளர்ந்தப்பட்டுள்ளது. இந்நிலையில் யாழ்.நகரின் பிரதான வீதிகள் மற்றும் முக்கிய பகுதிகளில் வீதித் தடைகள் அமைக்கப்பட்டு, இராணுவம் மற்றும்மேலும் படிக்க...
கொரோனா தொற்றுக்குள்ளான சஜித் விரைவில் குணமடைய வேண்டும் – ஜனாதிபதி மற்றும் பிரதமர் ருவிட்!
கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் அவரது பாரியார் ஆகியோர் விரைவில் குணமடைய வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது குறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள ஜனாதிபதி, அவர்கள் இருவரும் விரைவில் குணமடைந்து வர பிரார்த்திப்பதாகமேலும் படிக்க...
கைது செய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட மூவர் பொலிஸ் பிணையில் விடுதலை – யாழில் சம்பவம்
நாட்டில் முழுநேர பயண தடை அமுலிலுள்ள நிலையில், யாழ்ப்பாணம்- கொடிகாமத்திலுள்ள ஆலயமொன்றில் பூஜை வழிப்பாடுகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட மூவர், பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். கொடிகாமம்- வரணி வடக்கு பகுதியிலுள்ள ஆலயத்தில் பூஜை வழிபாடுகள் இடம்பெறுவதாக கொடிகாமமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- …
- 256
- மேலும் படிக்க