இலங்கை
பயணத்தடை: விரக்தி மற்றும் அவமானம் ஆகியவற்றினால் இருவர் உயிரிழப்பு- யாழில் சம்பவம்
கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை காரணமாக பலர் வாழ்வாதாரத்தை இழந்து மிகவும் துன்ப நிலையில் வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறு பயணத்தடை காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த கடலுணவு வியாபாரி ஒருவர், வாகன குத்தகைக் கட்டணத்தை செலுத்த முடியாமல்மேலும் படிக்க...
கொரோனா தடுப்பூசியை அச்சமின்றி விரைந்து பெற்றுக் கொள்ளுங்கள்- மகேசன் உமாகாந் மக்களிடம் கோரிக்கை
கொரோனா தடுப்பூசி எங்களுக்கு கிடைத்துள்ள வரபிரசாதமாகும். ஆகவே மக்கள் அச்சமின்றி விரைந்து தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுங்கள் என கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பேராசிரியரும் மட்டு.போதனா வைத்தியசாலை வைத்திய நிபுணருமான மகேசன் உமாகாந் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, கொரோனா தடுப்பூசியைமேலும் படிக்க...
தான தர்மங்களை செய்வதே மன நிம்மதியை தரும்- சபீஸ்
மரணம் எப்போதும் எம்மை சந்திக்கலாம். அதற்கு முன்னர் தான தர்மங்களை செய்வதே எங்களுக்கு மனநிம்மதியை தரும் எனஅக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவரும் அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினருமான எஸ்.எம். சபீஸ் தெரிவித்தார். அம்பாறை- அக்கரைப்பற்றிலுள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்மேலும் படிக்க...
2022ஆம் ஆண்டின் இறுதிக்குள் உலக மக்களுக்கு தடுப்பூசி: ஜி-7 நாடுகளின் தலைவர்களுக்கு பிரதமர் அழைப்பு
ஜி-7 நாடுகளின் உறுப்பினர்களை 2022ஆம் ஆண்டின் இறுதிக்குள் உலக மக்கள் தொகைக்கு தடுப்பூசி போடுவதில் உறுதியளிக்குமாறு பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ‘இந்த கொடூரமான தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவர எங்களுடன் இணையுமாறு எனதுமேலும் படிக்க...
பயணக்கட்டுபாடுகள் நீடிக்கப்படுமா? – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்
இலங்கையில் தற்போது அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாட்டை நீடிப்பது தொடர்பாக இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைமேலும் படிக்க...
சுற்றுச்சூழல் தினம்- விவேக்கின் பணியில் நமது பங்காக நாமும் நடுவோம் ஒரு மரம் வேலைத்திட்டம்
முப்பத்திமூன்று இலட்சத்துக்கும் அதிகமான மரங்களை நடுகை செய்த நடிகர் விவேக்கின் நினைவாக, சுற்றுச்சூழல் தினத்தன்று இலங்கையில் மரநடுகைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம், தனது சுற்றுச்சூழல் தின நிகழ்வினை இம்முறை இணையத்தின் ஊடாக ஏற்பாடு செய்திருந்தது. இதன்போது தமிழ்த்மேலும் படிக்க...
இலங்கை முதலீட்டு மாநாடு ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்!
இலங்கை முதலீட்டு மாநாடு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்று வருகிறது. இந்த மாநாடு இன்று (திங்கட்கிழமை) காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகிய நிலையில், இடம்பெற்று வருகிறது. 65 நாடுகளின் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள உள்ளனர். மேலும் இந்த மாநாடுமேலும் படிக்க...
ஒரு மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டன
ஒரு மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த நிலையில், மேலும், ஒரு மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் எதிர்வரும் 9ஆம் திகதி நாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். இலங்கை ஆரம்பத்தில் 6 இலட்சம் டோஸ் தடுப்பூசிகளைமேலும் படிக்க...
கொரோனாவுக்கு மத்தியில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம்
நாட்டில் நிலவும் அதிக மழையுடனான வானிலையால் 08 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. கொழும்பு, களுத்துறை, கம்பஹா, இரத்தினபுரி, கேகாலை, குருநாகல், மாத்தளை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களிலேயே டெங்கு காய்ச்சல் பரவும் அபாயமுள்ளதாகமேலும் படிக்க...
மனித உரிமை மீறல்கள்: அமெரிக்காவிடம் இலங்கை அரசு முக்கிய கோரிக்கை
இலங்கை குறித்து முன்வைக்கப்பட்டுள்ள மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை முன்னோக்கி கொண்டுச் செல்ல வேண்டாமென அமெரிக்க வெளிவிவகார குழுவிடம் இலங்கை அரசு கோரியுள்ளது. அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர் ரவிநாத் ஆரியசிங்கவின் ஊடாக குறித்த கோரிக்கையை இலங்கை அரசு முன்வைத்துள்ளது. அமெரிக்கமேலும் படிக்க...
இலங்கையின் கொரோனா பாதிப்பு 200,000ஐ கடந்தது
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தைக் கடந்துள்ளது. நாட்டில் இன்று மேலும் இரண்டாயிரத்து 280 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால்மேலும் படிக்க...
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: கைது செய்யப்பட்ட 10 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு
மட்டக்களப்பு- கல்குடா கடற்கரையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுஷ்டித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள 10 பேரையும் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்குமாறு வாழைச்சேனை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த மே மாதம் 18ஆம் திகதி, முள்ளிவாய்க்கால்மேலும் படிக்க...
14ஆம் திகதிக்கு பின்னரும் நீடிக்கப்படும் பயணக்கட்டுப்பாடு!
நாடு முழுவதும் தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 14ஆம் திகதிக்கு பின்னரும் நீடிக்க வாய்ப்பு இருப்பதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். இன்று (சனிக்கிழமை) கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அரசாங்க பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இவ்வாறு கூறினார்.மேலும் படிக்க...
யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் கொவிட்-19 தடுப்பூசி வழங்கும் செயற்பாடு முன்னெடுப்பு
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கொவிட்-19 தடுப்பூசி வழங்கும் செயற்பாடு இன்று (சனிக்கிழமை) காலை முன்னெடுக்கப்பட்டது. இன்று (சனிக்கிழமை) காலை 8 மணி முதல் யாழ்ப்பாணம் மாநகர சபை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில், யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள், தாதியர்கள் இணைந்து குறித்தமேலும் படிக்க...
போலித் தமிழ் தேசிய வாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட வேலைத் திட்டங்களும் போலியானவை – டக்ளஸ்
போலித் தமிழ் தேசியவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட வேலைத் திட்டங்களும் போலியானவையாகவே இருக்கும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை), கற்கோவளம் பகுதியில் இடிந்த நிலையில் காணப்பட்ட பாலத்தினை நேரில் சென்று பார்வையிட்ட அவர், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அமைச்சர் டக்ளஸ்மேலும் படிக்க...
முல்லைத்தீவில் முதலாவது கொரோனா மரணம் பதிவு
முல்லைத்தீவு மாவட்டத்தில் முதலாவது கொரோனா மரணம் பதிவாகியுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவந்த மாணிக்கபுரம் பகுதியை சேர்ந்த 44 வயதுடைய ஐயாத்துரை சுரேஷ்குமார் என்பவரே கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளார். இவர் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் அதற்கானமேலும் படிக்க...
எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் நிறுவனம் வழங்கவுள்ள இழப்பீட்டு தொகையிலும் மோசடி செய்ய அரசாங்கம் முயற்சி- மனுஷ
கொழும்பு துறைமுகத்தில் தீ விபத்துக்கு உள்ளான எம்.வி எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் உரிமையாளர்களிடம் இருந்து கிடைக்கப்பெறவுள்ள இழப்பீட்டிலும் அரசாங்கம் மோசடியில் ஈடுபடவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக மனுஷ நாணயக்கார மேலும் கூறியுள்ளதாவது, “ எம்.வி எக்ஸ்-பிரஸ்மேலும் படிக்க...
யாழில் தொழுகையில் ஈடுபட்ட 14 பேர் தனிமைப் படுத்தலில்
யாழ்ப்பாணம் ஐந்து சந்திப்பகுதியில் முஸ்லிம் பள்ளிவாசல் ஒன்றில் தொழுகையில் ஈடுபட்ட 14 பேர் சுகாதார பிரிவினரால் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தற்போது நாட்டில் பயணத்தடை அமுலில் உள்ள நிலையில் மக்கள் ஒன்று கூடுவது, வீதியில் பயணிப்பது உள்ளிட்டவை தடை செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில்மேலும் படிக்க...
தீ விபத்துக்குள்ளான கப்பல் குறித்து முறையான விசாரணைகளை மேற் கொள்ளுமாறு மனு தாக்கல்!
தீ விபத்துக்கு உள்ளான எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசித்த விதம் தொடர்பாக முறையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு உத்தரவிடக் கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சுற்றாடல் நீதிக்கான கேந்திர நிலையம் மற்றும் அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர்மேலும் படிக்க...
பயணக் கட்டுப்பாடு – வாடகை கார்கள் முச்சக்கர வண்டிகள் இயங்கத் தடை!
இலங்கையில் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் வாடகை கார்கள் அல்லது வாடகை முச்சக்கரவண்டி சேவைகள் இயங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் குறித்து தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன இந்த காலகட்டத்தில் அனைத்து வகையான பொது போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- …
- 256
- மேலும் படிக்க