இலங்கை
நீர்வீழ்ச்சியிலிருந்து தவறி வீழ்ந்து இளைஞர் உயிரிழப்பு

மாத்தளை, கந்தேனுவரவில் உள்ள நலகன எல்லா நீர்வீழ்ச்சியில் நேற்று (12) மாலை தவறி விழுந்த 19 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் மேலும் இருவர் காயமடைந்து மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் வத்தேகமவைச் சேர்ந்தமேலும் படிக்க...
பெண்களின் உரிமைகள், சமத்துவத்திற்கான எமது கூட்டு உறுதிப்பாட்டை நாம் மீண்டும் வலியுறுத்துகிறோம் – பீஜிங்கில் பிரதமர் அமரசூரிய

எந்தவொரு நாடும் இதுவரை பாலின சமத்துவத்தை முழுமையாக அடையவில்லை, ஆகையினால் எமது தொடர்ச்சியான அர்ப்பணிப்பானது தொடர்ந்தும் தேவைப்படுகின்றது. பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம் மற்றும் கௌரவம் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்கான கொள்கைகளைச் செயல்பாட்டு ரீதியாகக் கடைப்பிடிப்பதற்குமானமேலும் படிக்க...
மைத்திரியிடம் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு 05 மணி நேரம் விசாரணை
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (13) காலை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் (CIABOC) முன்னிலையானார். சுமார் ஐந்து மணி நேரம் நீடித்த வாக்குமூலத்தை வழங்கிய பின்னர், முன்னாள் ஜனாதிபதி பிற்பகல் 2:00 மணியளவில் ஆணைக்குழுவிலிருந்து வெளியேறியதாகமேலும் படிக்க...
பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட 14 பேர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது

போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மண் அகழ்வு போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்ட 14 பேர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த மூன்று நாட்களில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பாலித செனவிரட்ண தெரிவித்தார். ஐஸ் போதைப்பொருள், கஞ்சா,மேலும் படிக்க...
பதவி விலகும் ஐக்கிய மக்கள் சக்தியின் பல பாராளுமன்ற உறுப்பினர்கள்

ஐக்கிய மக்கள் சக்தியின் தற்போதைய சில பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை இராஜினாமா செய்து, எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் பிரதான வேட்பாளர்களாக போட்டியிடத் தயாராக உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின்மேலும் படிக்க...
பண்டாரவளையில் 2000 பேருக்கு வீட்டு உரிமை வழங்கிவைப்பு

மலையக சமூகத்தினருக்கான வீட்டு உரிமை பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (12) காலை பண்டாரவளை பொது விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது. இந்த நிகழ்வானது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இடம்பெறுகிறது. இந்திய நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் 10,000 வீடமைப்பு திட்டத்தின் நான்காவதுமேலும் படிக்க...
தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் இந்த வருடத்துக்குள் 1,750 ரூபாவாக உயர்த்தப்படும்- ஜனாதிபதி

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் இந்த வருடத்துக்குள் 1,750 ரூபாவாக உயர்த்தப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். பண்டாரவளையில் இன்று (12) இடம்பெறும் மலையக சமூகத்திற்கு வீட்டு உரிமைகளை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைமேலும் படிக்க...
பிரதமர் இன்று சீனாவுக்கு விஜயம்

சீன அரசாங்கத்தின் அழைப்பைத் தொடர்ந்து, 2025 ஆம் ஆண்டுக்கான பெண்கள் தொடர்பான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று சீனாவுக்கு சென்றார். “ஒரு பகிரப்பட்ட எதிர்காலம்: பெண்களின் முழுமையான வளர்ச்சிக்கான புதிய மற்றும் துரிதப்படுத்தப்பட்டமேலும் படிக்க...
காணி மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக பொலிஸார் நடவடிக்கை எடுத்தமையை வரவேற்கின்றோம்

காணி மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக பொலிஸார் நடவடிக்கை எடுத்தமையை வரவேற்ற வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் அதனைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லுமாறு வலியுறுத்தினார். அத்துடன் கடந்த காலங்களில் இடம்பெற்றதைப் போன்று மாவட்ட சிவில் பாதுகாப்புக் குழுக் கூட்டங்களை நடத்துவதற்குரியமேலும் படிக்க...
கொள்கலன் விவகாரத்துக்கும் அமைச்சரவை மாற்றத்துக்கும் தொடர்பில்லை

கொழும்பு துறைமுகத்தில் இருந்து கொள்கலன்களை சோதனையின்றி விடுவிக்கப்பட்ட விவகாரத்தை அடுத்தே அமைச்சர் பிமல் ரத்நாயக்கவிடம் இருந்து துறைமுகங்கள், விமான நிலையங்கள் அமைச்சு பறிக்கப்பட்டதாக கூறப்படுவதை அரசாங்கம் நிராகரித்துள்ளது. அரசாங்கம் தனது இலக்குகளை விரைவாக அடையும் வகையில், மிகவும் பொருத்தமான மற்றும் அறிவியல்மேலும் படிக்க...
மின்சார கட்டணம் குறித்து ஆணைக்குழுவின் இறுதி தீர்மானம்

மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பான இறுதி முடிவு இம்மாதம் 14ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படும் என்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மின்சாரக் கட்டணத்தை 6.8% உயர்த்த இலங்கை மின்சார சபை முன்மொழிந்துள்ளதாக அதன் பணிப்பாளர் ஜெயநாத் ஹேரத் கூறினார்.மேலும் படிக்க...
காலி துறைமுகத்தில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை

காலி துறைமுகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (10) பிற்பகல் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொலிஸ் அதிகாரிகள், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் கடற்படையினர் இணைந்து இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். பொலிஸ் நிலைய மோப்ப நாய்களும் இந்த சுற்றிவளைப்புமேலும் படிக்க...
விளக்கமறியலில் வைக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்குமாறு உறவினர்கள் கோரிக்கை

இராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்று எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க கோரி கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் கண்ணீருடன் மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளனர்.மேலும் படிக்க...
காரைதீவில் இராணுவ முகாம் அமைந்திருந்த காணி பொது மக்களிடம் கையளிப்பு

அம்பாறை – காரைதீவு பகுதியிலுள்ள இராணுவ முகாம் அமைந்திருந்த காணி நேற்று (10) பொது மக்களிடம் கையளிக்கப்பட்டது. 35 வருடங்களுக்கு முன்னர் குறித்த பகுதியில் காரைதீவு பிரதேச சபையும் பொது நூலகமும் இயங்கியிருந்தன. காரைதீவில் 0.5 ஏக்கர் நிலப்பரப்பில் காணப்பட்ட இந்தமேலும் படிக்க...
மலையக மக்களுக்கு வீட்டு உரிமைப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு நாளை

மலையக மக்களுக்கு 2,000 வீட்டு உரிமைப் பத்திரங்களை வழங்கும் தேசிய நிகழ்ச்சித்திட்டம் நாளை (12) காலை 10.00 மணிக்கு பண்டாரவளை பொது விளையாட்டு மைதானத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெறவுள்ளது. தோட்டப்புறப் பகுதிகளில் வசிக்கும் மலையக சமூகத்தினரின் வாழ்க்கைத் தரத்தைமேலும் படிக்க...
விமல் வீரவன்சவின் வாக்குமூலம்: பொலிஸ் திரித்து வெளியிட்டதாக குற்றச்சாட்டு
தேசிய சுதந்திர முன்னணியின் (NFF) தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச, தங்காலை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவில் (CID) அளித்த வாக்குமூலத்தை பொலிஸார் திரித்து ஊடகங்களுக்கு வெளியிட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டமேலும் படிக்க...
வரலாற்றை முறியடித்து புதிய உச்சத்தை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தை வெள்ளிக்கிழமை (10) அதன் அதிகபட்ச சாதனையைப் புதுப்பித்தது, அனைத்து பங்கு விலைக் குறியீடும் 22,318.72 யூனிட்டுகளாக உயர்ந்தது. அனைத்து பங்கு விலைக் குறியீடும் பகலில் 143.98 யூனிட்கள் அதிகரிப்பை அடைய முடிந்தது, இது முந்தைய நாளுடன் ஒப்பிடும்போது 0.65%மேலும் படிக்க...
தமிழ் அரசுக் கட்சி பலமாக தொடர்ந்து தமிழ் மக்கள் நலனுக்கு குந்தகமிழைக்காத வகையில் செயற்படும் – சி.வீ.கே

எங்கள் கட்சி கொள்கையான சமஷ்டி வழிக்கு வந்த கஜேந்திரகுமாருக்கு நன்றி. சமஷ்டியை நாங்கள் விட்டுக்கொடுக்கவில்லை. தமிழ் அரசுக் கட்சியை மலினப்படுத்தி அழித்து விடலாம் என்பது பகல் கனவே என தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்றுமேலும் படிக்க...
கனடாவில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த நபர் கைது

கனடாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 1.49 மில்லியன் ரூபாய் மோசடி செய்த ஒருவர் நேற்று (9) இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினரால் பணியகத்தில் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டவர் சிங்ஹாரகே ஜனக சில்வா என்ற நபர்மேலும் படிக்க...
தையிட்டி திஸ்ஸ விகாரை பிரச்சினைக்கு ஓரிரு வாரங்களில் தீர்வு – பிமல் ரத்நாயக்க

வடக்கில் தையிட்டி திஸ்ஸ விகாரை தொடர்பான பிரச்சினைக்கு இன்னும் ஓரிரு வாரங்களில் அரசாங்கத்தினால் சிறந்த தீர்வு முன்வைக்கப்படும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார். தையிட்டி திஸ்ஸ விகாரை தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றவர்கள் தெரிவிக்கும் வகையில் செயற்பட்டால் மதமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- …
- 469
- மேலும் படிக்க
